states

img

ஹரியானாவில் துரத்தித் துரத்தித் தாக்கப்படும் முஸ்லிம்கள் கடைகள், வீடுகள், வாகனங்கள் தீவைத்து எரிப்பு!

சண்டிகர், ஆக. 3 - ஊர்வலம் என்ற பெயரில், விஎச்பி-யும், பஜ்ரங் தள குண்டர்களும் நடத்திய மதக்கலவரத்தால், ஹரியானா மாநிலமே கடந்த 4 நாட்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.  இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 400 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். 300-க்கும் மேற்பட்ட வாகனங்கள், 200-க்கும் மேற்பட்ட வீடுகள் கொளுத்தப்பட்டு உள்ளன. பல இடங்களில் மசூதிகளும் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன. பாது காப்பின்மை காரணமாக, 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.  நூஹ் மாவட்டத்தில் தொடங்கிய இந்த வன்முறை காரணமாக, குர்கான், பல்வால், ரேவாரி மற்றும் பரிதாபாத் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முற்றி லுமாக முடங்கியுள்ளது. வன்முறை பரவாமல் தடுக்கிறோம் என்ற பெய ரில் இணையதள சேவைகள் முடக்கப் பட்டுள்ளது. வன்முறை கட்டுக்குள் வந்தபாடாக இல்லை.

 தாக்குதல், தீவைப்பு தொடர்ந்து  கொண்டிருக்கிறது. இஸ்லாமியர் களுக்கு சொந்தமான கட்டடங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு வரு கின்றன. இஸ்லாமியர்கள் பலர் விரட்டி விரட்டி கடுமையாக தாக்கப்பட்டு வரு கின்றனர். சாலையில் நடந்து செல்லும்  இஸ்லாமியர் ஒருவர் தாக்கப்படும் வீடி யோ ஒன்றும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. அதில், குல்லா அணிந்து தாடி வைத்திருக்கும் இஸ்லாமியரை பார்த்ததும் கலவர கும்பல் துரத்தி துரத்தித் தாக்குகிறது. அந்த இஸ்லா மியர் தடுக்கி விழுந்த நிலையில் அவரை சரமாரியாக மிதிக்கின்றனர். சம்பவ இடத்தில் போலீஸ் இருந்தும்கூட அவர்களால் விஎச்பி கும்பலைத் தடுக்க முடியவில்லை. நூஹ் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் மேலும் ஒரு மசூதி தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில்  யாருக்கும் எந்தவித காயமும் ஏற்பட வில்லை. விஜய் சவுக் அருகிலும், காவல் நிலையத்திற்கு அருகிலுமாக மொத்தம் 2 மசூதிகளுக்கு தீ வைக்கப் பட்டு உள்ளது. இதில், இரண்டு மசூதிகளும் சேதம் அடைந்துள்ளன. 

100 குடும்பங்கள்,  இப்போது 15 ஆகி விட்டன

விஎச்பி-யின் வன்முறையால், மேற்கு வங்கத்தில் இருந்து அகதி களாக வந்து ஹரியானாவில் தங்கி யிருந்த 100 முஸ்லிம் குடும்பங்களில், தற்போது வெறும் 15 குடும்பங்கள் மட்டும் இருப்பதாக, முஸ்லிம் பெண் மணி ஒருவர் கண்ணீர் விட்டுள்ளார். 25 வயதான ஷமீம் ஹூசைன் என்ற அந்தப் பெண்மணி, “புதனன்று மாலை சிலர் எங்கள் பகுதிக்கு வந்து முஸ்லீம்கள் எல்லாம் இந்த பகுதி யை விட்டு வெளியேறுங்கள் என்றனர்.  சொந்த மாநிலமான மேற்குவங்கத் திற்கு போவதற்கு கூட எங்களிடம் காசு  இல்லை. நாங்கள் உள்ளூர் கடைகளில் கடன் வாங்கி எங்கள் பிழைப்பை நடத்தி வருகிறோம். எனக்கு ஏதாவது ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எனக்கு ஒரு வயது மகன் இருக்கிறான். அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் உள்ளூர் மக்களுக்கும் நான் கேட்டுக் கொள்வது, எப்படியாவது எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்து உதவுங்கள் என்பதுதான்” என அழுதபடியே கையெடுத்து கும்பிட்டுள்ளார். இதேபோல ஹூசைனின் தாயா ரும், “இரவு 7 மணிக்கு 60 பேர் எங்கள் பகுதிக்கு வந்தனர். எங்களிடம் அவர்கள் எதுவும் பேசவில்லை. அவர்கள் வீட்டு உரிமையாளர்களிடம் பேசினர். இந்த பகுதிகளில் உள்ள முஸ்லிம்களை காலி செய்யுமாறு கூறி னர். இதனால் எல்லாரும் போய்விட்டா ர்கள். நாங்கள் 100 குடும்பத்தினர் இங்கு வசித்து வந்தோம். ஆனால் தற்போது 15 முதல் 16 குடும்பத்தினர் மட்டுமே இருக்கிறோம். எங்களால் வாழ முடியவில்லை. ஏனென்றால் எங்களிடம் பணம் இல்லை” என கண்ணீர் விட்டுள்ளார்.

தனது குழந்தையுடன் ஒர்க்-ஷாப்பில்  ஒளிந்து உயிர்தப்பிய ஹரியானா நீதிபதி

விஎச்பி-யின் தாக்குதலில், நீதிபதி ஒருவரும் தனது 3 வயது குழந்தையுடன் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். நூஹ் நகரின் கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டாக இருக்கும் அஞ்சலி ஜெயின் என்ற நீதிபதியின் வாகனத்தை, மதவெறிக் கும்பல் ஒன்று தாக்கி தீ வைத்துள்ளது. அவர்களிடமிருந்து தப்பிய நீதிபதி, தனது 3 வயது மகள் மற்றும் ஊழியர்களுடன் நூஹில் உள்ள பழைய பேருந்து நிலையத்தின் ஒர்க்-ஷாப்பிற்குள் ஒளிந்து உயிர் பிழைத்துள்ளனர். பின்னர், அவரை சில வழக்கறிஞர்கள் காப்பாற்றி அழைத்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக நீதிபதி அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 148 (கலவரங்கள்), 149 (சட்டவிரோதமான கூட்டம்), 435 (சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தீ), 307 (கொலை முயற்சி) மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நபருக்கும்  பாதுகாப்பு வழங்க முடியாது

இதற்கிடையே மாநிலத்தில் அமைதி திரும்பப் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்பதை வலியுறுத்தியிருக்கும் ஹரியானா பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார், ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு நபரையும் போலீசார் பாதுகாப்பது என்பது சாத்தியமில்லை என்று அலட்சியமாக கூறியுள்ளார். “உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று பாருங்கள். காவல்துறையால் மக்கள் அனைவரையும் பாதுகாக்க முடியாது. இங்கு இரண்டு லட்சம் மக்கள் இருக்கின்றனர். ஆனால் 50 ஆயிரம் போலீசார் மட்டும் உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹரியானா வன்முறைக்கு காரணம் என்று கூறப்படும் மோனு மானேசரைப் பற்றி எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. அவருக்கு எதிராக ராஜஸ்தான் அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது. தலைமறைவாக இருக்கும் மோனு மானேசரை கண்டுபிடிப்பதற்கு, தேவைப்பட்டால் நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம்” என்று கட்டார் தெரிவித்துள்ளார்.

ஹரியானா வன்முறை போல இனி நிறைய நடக்கும்! 

இதனிடையே, ஹரியானா போன்ற மதக்கலவரம், இனி நாடு முழுவதும் நடக்கும் என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “ஹரியானாவைச் சேர்ந்த ஜாட் மக்கள் ஆர்ய சமாஜ் வாழ்க்கை முறையை நம்புகிறவர்கள். இதனால் அவர்கள் வன்முறையில் இருந்து விலகியே இருந்துள்ளனர். அதேபோல இந்தப் பகுதி இஸ்லாமியர்களும் அமைதியானவர்கள்தான். சுதந்திரம் அடைந்தது முதலே இங்கு மோதல் இருந்தது இல்லை. ஆனால், மக்களவைத் தேர்தல் 2024-இல் நடைபெற உள்ள நிலையில், வரும் காலங்களில் வன்முறை அதிகரிக்கவே செய்யும். மணிப்பூரைப் பார்த்தாலே இது நமக்குப் புரியும். இவர்களைக் (பாஜக உள்ளிட்ட சங்-பரிவாரங்களை) கட்டுப்படுத்தாவிட்டால் நாடு முழுவதும் மணிப்பூர் போல் பற்றி எரியும். பொதுமக்களை இரு பிரிவுகளாகப் பிரித்துத் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்காக ஆளும் தரப்பு இதுபோன்ற வன்முறைகளை அரங்கேற்றும்” என்று ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.