சண்டிகர், ஆக.1- ஹரியானா மாநிலத்தில் விஎச்பி நடத்திய மதக் கலவரத்திற்கு பலி யானோர் எண்ணிக்கை 5 ஆக அதி கரித்துள்ளது. குர்கான் மாவட்டத்திலுள்ள நூஹ் என்ற பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத்தும், அதன் இளைஞர் பிரி வான பஜ்ரங் தள் அமைப்பினரும் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா என்ற பேரணியை ஜூலை 31 அன்று நடத்தினர். பேரணியில் வந்தவர் கள், குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக வெறுப்புக் கோஷங்களை எழுப்பி யபடியே சென்றுள்ளனர். இது மற்றொரு பிரிவினரை ஆத்திர மூட்டும் நடவடிக்கையாக அமைந் துள்ளது. குர்கான் - ஆல்வார் இடையே கேட்லா மோட் பகுதியில் பேரணி வந்தபோது, இதுதொடர் பாக சிலர் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதையே தங்களுக்கு கிடைத்த கலவர வாய்ப்பாக எடுத்துக் கொண்ட விஎச்பி கூட்டத்தினர், உட னடியாக மதவன்முறையில் இறங்கி யுள்ளனர். ஒருவருக்கொருவர் கற் களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ள னர். வாகனங்கள், கடைகள், வீடு களை அடித்து நொறுக்கி தீவைத் துள்ளனர். கலவரக்காரர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதில், ஊர்க்காவல் படை வீரர்கள் 2 பேர், உள்ளூர்காரர் ஒருவர் மற்றும் அடை யாளம் காணப்படாத ஒருவர் என மொத்தம் 4 பேர் கொல்லப்பட்டனர்.
சுமார் 20-க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர். வன்முறை கட்டுக் கடங்காமல் போனதை அடுத்து, போலீசார் கண்ணீர் புகைக் குண்டு களை வீசி கலவரக்காரர்களை கலைத்தனர். வன்முறை மேலும் பர வாமல் தடுக்கும் வகையில், நூஹ், குர்கான், பல்வால், பரிதாபாத் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தர வும் பிறப்பித்தனர். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்க ளுக்கும் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் குமார் யாதவ் செவ்வாயன்று விடு முறை அறிவித்தார். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு, பல்வேறு பகுதிகளில் இணையதள சேவைகளும் 3 நாட்க ளுக்கு தடை செய்யப்பட்டன. இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்த போதிலும், செக் டார் 57-இல் உள்ள அஞ்சுமான் ஜமா மசூதி செவ்வாய்கிழமை அதி காலை தீ வைக்கப்பட்டதுடன், அந்த மசூதியில் இமாமாக பணியாற்றி வந்த 19 வயதேயான ஹபீஸ் சாத் மற்றும் அவருடன் இருந்த மற் றொரு நபர் என இரண்டு பேர் கொடூரமாக தாக்கப்பட்டனர். இதில் 19 வயதேயான ஹபீஸ் சாத் பரிதாபமான முறையில் இறந்தார். 80 பேர் கொண்ட கும்பல், செவ்வாயன்று அதிகாலை 12.10 மணியளவில் இந்த கொலைவெறி யாட்டத்தை நடத்தியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலவரப் பலி எண்ணிக்கையும் 5 ஆக உயர்ந்துள்ளது.
மாட்டுக் குண்டன் மோனு மானேசரின் வெறுப்புப் பிரச்சாரம்!
5 பேரைப் பலிவாங்கிய ஹரியானா மதக்கல வரத்திற்கு, மாட்டுக் குண்ட னான மோனு மானேசர், கடந்த சில மாதங்களாக சமூகவலை தளங்களில் மேற்கொண்டுவந்த வெறுப்புப் பிரச்சாரமும் முக்கியக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2015-ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது மாவட்ட பசுவதை தடுப்பு கண்காணிப்பு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட வர்தான் மோனு மானேசர். 2019- இல் பசுக்களை கடத்திச் சென்ற வர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பிரபலமான இவர், தனது கூட்டா ளியான மோகித் யாதவுடன் இணைந்து பசுவதை தடுப்பு என்ற பெயரில் வன்முறை தாக்கு தல்களை நியாயப்படுத்தி வீடி யோக்கள் வெளியிடுவதையும், யூடியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ஆயுதங்களுடன் இருப்பது போல வீடியோக்கள் வெளியிட்டு மிரட்டுவதையும் வாடிக்கையாகக் கொண்டி ருந்தார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜூனைத், நசீர் ஆகிய இருவரையும் அங்கிருந்து கடத்தி வந்து படுகொலை செய்து எரித்த சம்பவத்தில் மோனு மானேசர் உள்ளிட்ட அவரது குண்டர் படை மீது கொலை வழக்கும் உள்ளது. எனினும் இப்போதுவரை அவர் போலீசிடம் சிக்கவில்லை. இந் நிலையில் மேவாட் பகுதியில் நடக்கும் பேரணிக்கு தானும் வரு வேன் என்று மானேசர் கூறி யிருந்தார். குர்கானில் பதற்றம் அதிகரித்து வன்முறை வெடிப்ப தற்கு மானேசரின் இந்த அறி விப்பும் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.