ஹரியானா மாநிலத்தில் தூய்மைப் பணியாளர் வேலைக்கு 46,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் கடும் வேலையின்மை காரணமாக, மாதம் 15,000 சம்பளம் மட்டுமே வழங்கப்படும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர் வேலைக்கு 46,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
ஹரியானா 'கெளஷல் ரோஸ்கர் நிகாம்' ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலைக்காக விண்ணப்பித்த மொத்தம் 3,95,000 பேரில், 39,990 பேர் இளங்கலைப் பட்டதாரிகள், 6,112 பேர் முதுகலைப் பட்டதாரிகள், 1,17,144 பேர் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.