states

img

அமித்ஷா காஷ்மீர் பயணம் ; மெகபூபா முப்திக்கு வீட்டுச்சிறை!

ஸ்ரீநகர், அக். 5 - தான் வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டுள்ளதாக ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக ஜம்மு - காஷ்மீர் சென்றுள்ளார். அவர் செவ்வாயன்று ரஜோரி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். சுற்றுப்பயணத்தின் 2-ஆம் நாளான புதனன்று ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்துவார்; மாலையில் பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அமித்ஷா பங்கேற் பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அமித்ஷா சுற்றுப்பய ணத்தின் பின்னணியில், தான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக மெக பூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.  “அமைதி நிலை திரும்பி விட்டது என உள்துறை அமைச்சர் தம்பட்டம் அடித்துவரும் நிலையில் பத்தன் பகுதி யில் உள்ள எனது கட்சி தொண்ட ரின் இல்ல திருமண செல்ல நினைத்த தால் நான் வீட்டுச் சிறையில் வைக்கப் பட்டுள்ளேன்.  முன்னாள் முதல்வரின் அடிப்படை உரிமை சுலபமாக ரத்து செய்யப்படும்போது, சாமானியர்களின் அவல நிலையை நினைத்துப்பார்க்க முடியவில்லை’ என மெகபூபா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.