உத்தரப்பிரதேசத்தின் எட்டா மாவட்டத்திற்குட்பட்ட நாக்லா கசா கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் சனியன்று மகி பூர் ணிமா நிகழ்வை முன்னிட்டு கங்கை நதி யில் நீராடுவதற்காக காஸ்கஞ்சை நோக்கி டிராக்டரில் சென்றனர். காதை கிராமம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அருகில் உள்ள குளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் சனியன்று நள்ளி ரவு நேரத்தின்படி 8 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி யது. காணாமல் போன 2 பேரும் ஞாயி றன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
இதில் சோகமான விஷயம் என்ன வென்றால் நாக்லா கசா கிராமத்தைச் சேர்ந்த சித்து என்பவரின் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 10 பேரும் இந்த டிராக் டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.