லக்னோ, செப்.1- உ.பி. பாஜக முதல்வர் ஆதித்ய நாத், சிவப்புக் கம்பளத்தில் நடந்து சென்று வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டது கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கங்கை, யமுனை உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெரு க்கு ஏற்பட்டுள்ளது. காஜியாபாத், வார ணாசி, பிரயாக்ராஜ் ஆகிய மாவட்டங் களின் பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை யும் பாதிப்பையும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் நேரில் சென்று ஆய்வு செய்தார். வாரணாசியில் உள்ள கங்கை நதிக்கரையான அஸ்ஸி காட் பகுதியில் ஆற்றுவெள்ளம் ஏற்படு த்திய சேதத்தையும் சென்றுபார்த்தார். அப்போது, நதிக்கரையை ஒட்டிய சாலையில் மழை நீர் தேங்கி இருந்ததால், ஆதித்யநாத்திற்காக மழை வெள்ளத்தின் மீது உயரமான நடைமேடை அமைத்து அதன் மீது சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. இந்த நடைமேடை வழியாக சிவப்புக் கம்பளத்தில் நடந்து சென்று முதல்வர் ஆதித்யநாத் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டார். இதுதொடர்பான வீடியோ காட்சி கள் சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், மக்களின் துயர்துடைக்கும் பணியின்போதும் பகட்டுத்தனமாக நடந்து கொள்வதா? என்று பலரும் ஆதித்யநாத் அரசை விமர்சித்து வருகின்றனர்.