லக்னோ, ஜன.1- உத்தரபிரதேசத்தில் மூடப்படாமல் பொதுக் கழிப்பறையை அதிகாரிகள் கட்டியுள்ளனர். நான்கு கழிப்பிடங்கள் சுவர்களோ கதவுகளோ இல்லாமல் அருகருகே வைக்கப்பட்டிருந்தன. பஸ்தி மாவட்டத்தில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள தெஹ்சில் ருடவுலி பகுதியில் உள்ள தன்சா கிராமத்தில் இந்த விசித்திரமான கழிப்பறை அமைந் தள்ளது. இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலானதை அடுத்து, பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் கழி வறையை இடிக்க முயன்றனர். சமீபத் தில் ஒரே கழிவறையில் இரண்டு கழிப் பிடங்கள் அடுத்தடுத்து வைக்கப்பட் டது பஸ்தியில் விவாதமானது குறிப்பி டத்தக்கது.