states

img

2024 தேர்தலில் பாஜகவை தோற்கடித்துக் காட்டுவோம்!

ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி அறிவிப்பு

லக்னோ, மார்ச் 19- உ.பி. தேர்தலில் அகிலேஷ் தலை மையிலான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து 33 தொகுதிகளில் ராஷ்டிரிய லோக் தளம் (RLD) கட்சி  போட்டியிட்டது. எனினும் 8 இடங்களில் மட்டுமே அது வெற்றி பெற்றது. இந்நிலையில், உ.பி. தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக ஆர்எல்டி கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியி ருப்பதாவது: 2013-இல் வகுப்புவாத கலவரங்க ளால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி களான முசாபர் நகர், ஷாம்லி மற்றும் மீரட் ஆகிய இடங்களில் பாஜக-வைத் தோற்கடித்தோம்.  கைரானாவில் இந்துக்கள் வெளி யேறும் பிரச்சனையை பாஜக தூண்டி விட்டது. அங்கும் நாங்கள் பாஜக-வைத் தோற்கடித்துள்ளோம். மேற்கு உத்தரப் பிரதேசத்தில் மிகவும் செல் வாக்கு மிக்க தலைவர்களான சங்கீத் சோம், உமேஷ் மாலிக் மற்றும் சுரேஷ் ராணா போன்றவர்கள் தோல்வியை சந்தித்தனர். விவசாயிகளின் போராட் டம் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.  எனினும், பொதுமக்களிடம் எங்க ளது செய்தியை திறம்பட தெரிவிக்காத தால், பல இடங்களில் 500-க்கும் குறை வான வாக்குகள் வித்தியாசத்தில் நாங் கள் தோற்றுவிட்டோம்.  இந்த தேர்தலில் நாங்கள் நிறைய  கற்றுக்கொண்டோம். 2024 மக்களவை தேர்தலில் அகிலேஷூடன் இணைந்தே போட்டியிடுவோம்.  பாஜக மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும், மக்கள் அதை தங்கள் வாக்குகளில் பிரதிபலிக்கவில்லை. எதிர்க்கட்சியாக இருந்து முக்கிய பிரச் சனைகளை எழுப்புவோம். 80 வெர்சஸ் 20 கதையை மேலும் சொல்ல பாஜக வை அனுமதிக்க மாட்டோம்.  இவ்வாறு ஜெயந்த் சவுத்ரி குறிப் பிட்டுள்ளார்.