லக்னோ, அக். 5 - இந்தியாவை ‘இந்து ராஷ்டிரா’ என அறிவித்ததும் இந்துக்கள் ஆயுதம் ஏந்தத் தயாராக வேண்டும் என்று பாடகர் தர்மேந்திர பாண்டே சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இந்தியாவில் 2024-ஆம் ஆண்டிலும் பாஜக ஆட்சிக்கு வந்தால், தற்போது நடை முறையில் இருக்கும், மதச்சார்பற்ற அரசிய லமைப்புச் சட்டம் நீக்கப்படும். இந்தியா இந்து ராஷ்டிரமாக அறிவிக்கப்படும். தேர்தல் நடைமுறையும் இருக்காது. மத அடிப்படை யிலான அதிபர் ஆட்சிமுறைக்கு நாடு இட்டுச் செல்லப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து எச்சரித்து வரு கின்றனர். 2024 தேர்தலில் பாஜக-வை தோற்கடிப்பதற்கான முயற்சிகளிலும் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில்தான், உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்தா நகரில் நடைபெற்ற ‘ஜாக்ரன்ஸ்’ என்ற நிகழ்ச்சியில் பாடகர் தர்மேந்திர பாண்டே கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அப்போது, “பிரதமர் மோடி, இந்தி யாவை இந்து ராஷ்டிரமாக அறிவித்த வுடன் இந்துக்கள் அனைவரும் சிறுபான்மை யினருக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும். நரேந்திர மோடியிடம் இருந்து உத்தரவு வருவதற்கு முன்பே நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். உங்கள் வீடுகளின் மீது காவி கொடி இருக்க வேண்டும். தீபங்களை ஏற்ற வேண்டும். உங்கள் வீடுகளில் ஒரு கூர்மையான அரி வாளை தயார் செய்து வைக்க வேண்டும். பெண்கள் தங்களுக்கான ஆயுதத்தை வைத்திருக்க வேண்டும். இந்தியாவை பிரதமர் மோடி ‘இந்து ராஷ்டிரா’ என்று அறிவித்தவுடன் இந்த ஆயுதங்கள் நமக்கு தேவைப்படும்” என்று வன்முறைக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தர்மேந்திர பாண்டேவைக் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.