லக்னோ, அக். 14 - அறக்கட்டளை பெயரில் மக்களி டம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக, பெண் பத்திரிகையா ளரும், ‘குஜராத் கோப்புகள்’ என்ற நூலின் ஆசிரியருமான ராணா அய்யூப் மீது, அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள் ளது. மும்பையைச் சேர்ந்தவர் புகழ் பெற்ற பத்திரிகையாளர் ராணா அய்யூப். ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ மற்றும் புலனாய்வு இதழான தெகல் ஹா ஆகியவற்றில் ஏராளமான கட்டு ரைகளை எழுதி வருபவர் ஆவார். குஜராத் மாநிலத்தில், கடந்த 2002-ஆம் ஆண்டு, மோடி முதல்வ ராக இருந்தபோது, இஸ்லாமியர்க ளுக்கு எதிராக மிகப்பெரிய இனப் படுகொலை அரங்கேற்றப்பட்டது. முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் படு கொலை செய்யப்பட்டனர். அவர்க ளின் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப் பிலான சொத்துக்களும் சூறையாடப் பட்டன. அப்போது, குஜராத் படுகொ லையின் பின்னணியில் இருந்த சங்-பரிவாரங்களின் திட்டமிட்ட சதியை ‘குஜராத் கோப்புகள்’ (Gujarat Files) என்ற பெயரில் அம்பலப்படுத் தியவரும் ராணா அய்யூப்-தான். குறிப்பாக, குஜராத் வன்முறை, அங்கு நடைபெற்ற போலி என்கவுண் ட்டர், குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை உள்ளிட்டவை குறித்து இவர் எழுதிய புலனாய்வு கட்டுரைகள் நாடு முழுவ தும் அப்போது பெரும் விவாதங்க ளை உருவாக்கியது. இதன் விளை வாக, தற்போதைய ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த 2010-ஆம் ஆண்டு சிறை செல்ல நேரிட்டது.
இந்நிலையில், விகாஸ் சங்கி ரித்தயன் என்பவர் காஜியாபாத்தில் உள்ள இந்திராபுரம் காவல் நிலை யத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், “ராணா அய்யூப், அறக் கட்டளை ஒன்றை ஆரம்பித்து, நிவார ணப் பணிகளுக்கு மக்களிடம் இருந்து ‘கீட்டோ’ என்ற ஆன்லைன் தளம் மூலம் நிதி திரட்டினார். ஆனால், இந்த நிதி யை நிவாரணப் பணிகளுக்கு இவர் முழுமையாக பயன்படுத்தவில்லை. பி.எம். கேர்ஸ் நிதி மற்றும் முதல் வர் நிவாரண நிதிக்கு ரூ.74.50 லட்சம் அனுப்பி உள்ளார். ரூ.50 லட்சத்தை அவரது வங்கிக் கணக்கில் நிரந்தர வைப்பு தொகையாக மாற்றியுள் ளார். வங்கியில் தனியாக ஒரு நடப்பு கணக்கை தொடங்கி, அதில் அறக் கட்டளைக்கு வசூலித்த நிதியை மாற்றியுள்ளார். 3 வங்கிக் கணக்குக ளில் இவர் அறக்கட்டளை பணத்தை சேமித்து வைத்துள்ளார். இதன் மூலம் இவர் நிதி மோசடியில் ஈடு பட்டுள்ளார்” என்று விகாஸ் சங்கி ரித்தயன் கூறியிருந்தார். இதனடிப்படையில், ராணா அய்யூப் மீது, இந்திய தண்டனைச் சட்டம், ஐ.டி. சட்டம், கறுப்புப் பணம் சட்டம் ஆகியவற்றின் பல பிரிவுக ளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில், அமலாக்கத் துறை தான் பதிவு செய்த வழக்கில், ராணா அய்யூப் மீது வியாழனன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள் ளது. முதல் கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில், ஏப்ரல் 2020 இல் ‘கீட்டோ’ (Ketto) என்ற கிரவுட் பண்டிங் இணையதளத்தில் ராணா பிரச்சாரம் மேற்கொண்டு சுமார் 2.69 கோடி ரூபாயை வசூலித்ததாக ராணா அய்யூப் மீது அமலாக்கத் துறை இயக்குநரகம் குற்றம் சாட்டி யுள்ளது. வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமலேயே, வெளி நாட்டிலிருந்து ராணா அய்யூப் நிதி பெற்றதாக கூறியுள்ள அமலாக்கத் துறை, பெறப்பட்ட நன்கொடைகள் ராணாவின் தந்தை மற்றும் சகோத ரியின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் அவரது தனிப்பட்ட கணக்கிற்கு மாற்றப் பட்டுள்ளது. 50 லட்சம் ரூபாய் நிலை யான வைப்புத்தொகை கணக்கை உருவாக்கி, 50 லட்சம் ரூபாயை புதிய கணக்கிற்கு ராணா மாற்றி யுள்ளார். சமூக நலப் பணிகளுக்காக 29 லட்சம் ரூபாயை மட்டுமே ராணா பயன்படுத்தியுள்ளார். ‘பிஎம் கேர்ஸ்’ நிதியிலும் முதலமைச்சரின் நிவாரண நிதியிலும் மொத்தம் 74.50 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளார் என்றும் அமலாக்கத்துறை இயக்குநரகம் குற்றம் சாட்டியுள்ளது.
ஏற்கெனவே, ராணா அய்யூப்-பின் 3 வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ. 1 கோடியே 77 லட்சத்து 27 ஆயி ரத்து 704 மற்றும் நிரந்தர வைப்பு நிதி ரூ. 50 லட்சத்துக்கு கிடைத்த வட்டித் தொகை ஆகியவற்றை அம லாக்கத்துறை முடக்கியது குறிப்பி டத்தக்கது. இதனிடையே, தன்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ராணா அய்யூப் மறுத்துள்ளார்.