states

img

பாஜக எம்எல்ஏ-வை விரட்டியடித்த தொகுதி மக்கள்!

லக்னோ, ஜன. 21 - உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10-இல் துவங்கி மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதற்கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெற வுள்ளதால் பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் இடையே பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில், உ.பி. மாநிலம் கட்டவ்லி தொகுதி பாஜக எம்எல்ஏ விக்ரம்சிங்  சைனி, முசாபர்பூர் நகரில் தனது சொந்த தொகுதியில் உள்ள ஒரு கிராமத்திற்கு வாக்குசேகரிக்க சென்றுள்ளார். அப்போது, விக்ரம்சிங் சைனியைத் திரும்பிப் போகச் சொல்லி, கிராம மக்கள் முழக்கம் எழுப்பியுள்ளனர். ஆனால், அவர் களிடம் எம்எல்ஏ விக்ரம்சிங் சைனி எதிர் வாக்கு வாதம் செய்துள்ளார். இதனால் ஆவேச மடைந்த பொதுமக்கள் தொடர்ந்து எதிராக முழக்கம் எழுப்பி, எம்எல்ஏ சைனியை அந்த கிராமத்திலிருந்து விரட்டியடித்துள்ளனர். சைனி தனது காரில் ஏறிப் புறப்பட்ட போது, அவரது காரை பின்தொடர்ந்து கிராம மக்கள் விரட்டிக் கொண்டே சென்றுள்ளனர்.  “இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான வர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன்; பசுக் களை கொல்பவர்களின் கை-கால்களை உடைப்பேன்; நமது நாடு இந்துஸ்தான் (இந்துக் களுக்கான தேசம்)” என்றெல்லாம் பேசி  தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்தவர் தான் எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி ஆவார். இந்நி லையில், வாக்குசேகரிக்க வந்த அவரை பொதுமக்கள் கூடி விரட்டியடித்தது பாஜக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.