states

img

ஆக்ரா - லக்னோ அதிவேக நெடுஞ்சாலை சமாஜ்வாதி ஆட்சியில் அமைக்கப்பட்டது!

அகிலேஷ்  யாதவ் கடும் சாடல்

லக்னோ, பிப்.19- உத்தரப் பிரதேச மாநில மூன்றாம் கட்டத் தேர்தலையொட்டி, பாஜக இளை ஞர் பிரிவு தலைவரும், பெங்களூரு தெற்குத் தொகுதி எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா பிரச்சாரம் மேற் கொண்டார். தனது இந்த பிரச்சார பயணத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட தேஜஸ்வி சூர்யா, “லக்னோவிலிருந்து கன்னோஜிற்கு யோகி ஆதித்யநாத்தின் அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கிறேன்” என ஜம்பமாக பதிவிட்டார்.  ஆனால், சூர்யாவின் இந்த பதிவு சமூகவலைதளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 302 கிமீ நீளமுள்ள ஆக்ரா - லக்னோ விரைவுச் சாலை 2016-ஆம் ஆண்டு அகிலேஷால் திறந்து வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 2017-இல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் விடப்பட்டது. அவ்வாறிருக்க, தேஜஸ்வி சூர்யா இப்படியா பொய் சொல்வது? என்று பலரும் கிண்டலடிக்க ஆரம் பித்தனர்.

இந்நிலையில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷூம், சூர்யா கூறுவது பொய் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். “விளக்கின் கீழ் இருள் இருப்பதை ஒருவர் கேள்விப்பட்டிருப்பார். ஆனால், பாஜக தலைவர்களின் அறியாமை யை பார்க்கும்போது, ‘சூர்யா’ என்றால் சூரியனுக்கு கீழே உள்ள இருள் என்று கூட சொல்லலாம் போலிருக்கிறது. ஆக்ரா - லக்னோ விரைவுச்சாலை குறித்து தேஜஸ்வி சூர்யா, வானளாவப் புகழ்ந்து பேசும்போது, அது எங்க ளால் (சமாஜ்வாதி ஆட்சியில்) உரு வாக்கப்பட்டது என்பதை அவர் அறிந்தி ருக்க வேண்டும். யோகி ஆதித்யநாத் காலத்தில் இந்த விரைவுச்சாலை போடப் படவில்லை. தயவுசெய்து இதற்கும் திறப்பு விழா நடத்தி விடா தீர்கள்” என காட்டமாக குறிப்பிட்டுள் ளார். பொய் பேசிய பாஜக எம்.பி.  தேஜஸ்வி சூர்யா, டுவிட்டரில் கையும் களவுமாக சிக்கி தற்போது அவமானப் பட்டுள்ளார்.