states

img

உ.பி.யில் முன்னாள் எம்.பி., சுட்டுக்கொலை

கைகட்டி வேடிக்கை பார்த்த பாஜக அரசின் போலீசார்

லக்னோ,ஏப்.16-   உத்தரப்பிரதேச மாநிலம் பிர யாக்ராஜ் (அலகாபாத்) மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  அத்திக் அகமது மற்றும் அவரது சகோ தரர் ஆகிய 2 பேரும் போலீசார் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டனர்.  வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை  வழக்கில், அத்திக் அகமது  மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 15 சனிக்கிழமை யன்று இரவில்  இருவரும் கைகளில் விலங்கு பூட்டப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் இருந்து பிரயாக் ராஜ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.  அப்போது அவர்களை செய்தி யாளர்கள் சூழ்ந்தனர். செய்தியாளர் களிடம் அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த 3 பேர்  திடீரென்று துப்பாக்கியால் அத்திக் அகமது, அஷ்ரப் அகமதுவை சுட்டுக் கொன்றனர். மொத்தம் 36 ரவுண்டுகள் அவர்கள் மீது சுடப்பட்டன. இருவரை யும் கொலை செய்த பிறகு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கொலையாளிகள் கோஷ மிட்டனர். இவர்கள் பத்திரிகையாளர்  கள் பயன்படுத்தும் மைக், கேமிராக்களுடன் நுழைந்து, அத்திக் அகமதுவை நெருங்கி, மிக அருகில் இருந்து, துப்பாக்கியால் சுட்டனர். இச்சம்பவத்தால் அங்கு குழுமி யிருந்த அனைவரும் பதற்றமடைந்து ஓடினர். இந்தக் காட்சி நேரலையில் பதிவு செய்யப்பட்டது. 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் அவரது மகன் ஆசாத் அகமது என்கவுண்ட்டரில் போலீசாரால் கொல்லப்பட்டார். மகனின் இறுதிச்  சடங்கில் கூட பங்கேற்க அத்திக்  அக மதுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது

3 பேர் சரண்

பெரும் அதிர்ச்சி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை சம்பவத்தால்  உத்தரப்பிரதேச மாநி லத்தில் 75 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அத்திக் அகமது கொலை செய்யப் படும் காட்சியை யாரும் சமூக வலை தளத்தில் பகிர வேண்டாம் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தர விட்டுள்ளார். இந்த கொலைச்சம்பவம் நிகழ்ந்த சில நொடிகளில் லாவ்லீன் திவாரி, அருண் மற்றும் சன்னி ஆகிய 3 பேர் காவல்துறையிடம் சரணடைந்தனர். காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

யார் இந்த அத்திக் அகமது?

60 வயதான அத்திக் அகமது, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளில் பொறுப்பில் இருந்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1989 முதல் 2004  வரை 5 முறை சட்டமன்ற உறுப்பின ராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் (2004 முதல் 2009) பதவி வகித்துள்ளார். அவர் மீது 101 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2005 ஆம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏ ராஜு  பால் மர்ம நபர்களால் கொல்லப் பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது உள்ளிட் டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கொலை வழக்கின் முக்கிய சாட்சியாக வழக்கறிஞர் உமேஷ் பால் இருந்தார். கடந்த 2006  பிப்ரவரி 28 அன்று அவர்  கடத்தப்பட்டு கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக அத்திக் அகமது உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இத னிடையே கடந்த பிப்ரவரி 24 அன்று  உமேஷ் பால் கொலை செய்யப் பட்டார். இவ்வழக்கிலும் அத்திக் அக மது முக்கிய குற்றவாளியாக சேர்க்கப் பட்டார். இந்த சூழலில்  பிரயாக்ராஜில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் உமேஷ்  பால் கடத்தல் வழக்கில் தீர்ப்பு வழங் கப்பட்டது. இதற்காக, குஜராத்தின் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டிரு ந்த அத்திக் பலத்த பாதுகாப்புடன் பிரயாக்ராஜ் கொண்டு வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 17 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் நீதிபதி தினேஷ் சந்திர சுக்லா தீர்ப்பினை வழங்கினார். இதன்படி முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது, அவரது கூட்டாளிகள் கான் சவுலத், தினேஷ் பாசி ஆகியோருக்கு ஆயுள்  தண்டனையும் தலா ரூ.1 லட்சம் அபராத மும் விதிக்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் அத்திக் அகமதுவின் தம்பி காலித் அசிம் உட்பட 7 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

பாஜக அரசே திட்டமிடும் படுகொலைகள்

பாஜகவின் யோகி ஆட்சியில் என்கவுண்ட்டர் கொலைச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கின்றன. குற்றம் செய்பவர்களை சுடுவதில் தவறு இல்லை என்று முதல்வர் யோகி 2017 ஆம் ஆண்டில் ஒரு பேட்டியில் கூறினார்.இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. உத்தரப்பிரதேச அரசு ஆவண ங்களின்படி 2017 ஆம் ஆண்டில் 1038 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப் பட்டனர். இந்த என்கவுண்ட்டர்களில் 238 பேர் மோசமான காயங்களுடன் தப்பியுள்ளனர். கடந்த 10 மாதங்களில் 138 பேர் என்கவுண்ட்டரில் கொலை செய்யப்பட்டுள்ள னர். சிறையில் இருக்கும் பலர் விடுதலை செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகு என்கவுண்ட்டரில் கொல்லப்படு கிறார்கள். என்கவுண்ட்டர் செய்யப்படுவதற்கு முன்பு கடும் சித்ரவதை செய்யப்பட்டு, அவர்களது நெஞ்செலும்புகள் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.சிலரின் கைகள் தீயில் பொசுக்கப்பட்டுள்ளன. இதில் முஸ்லிம்கள்தான் அதிக ளவில் என்கவுண்ட்டரில் கொல்லப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாரான்பூர், ஷாம்லி, முசாபர் நகர் ஆகிய பகுதிகளில்தான் பெரும்பாலும் கைது நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இதில் குடும்பங்கள் மொத்தமாக குறிவைக்கப்படுகின்றன. இதனால்தான் யோகியின் அரசை, ஜங்கிள் ராஜ், அதாவது காட்டு ராஜ்ஜியம் என்று பொதுமக்கள் கோபத்துடன் விமர்சிக்கின்றனர்.

அகிலேஷ் குற்றச்சாட்டு

இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் தனது டிவிட்டர் பதிவில், ‘‘உத்தரப் பிரதேசத்தில் குற்றச் செயல்கள் உச்சத்தை தொட்டுள்ளன. காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படும் நபரின் உயிருக்கே பாதுகாப்பு இல்லையெனில், சாமானிய மக்களின் கதி என்ன?’’ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘ஆதித்யநாத் அரசே நேரடிப் பொறுப்பு’

உத்தரப்பிரதேச முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் ஊடகங்களின் முன்னிலையிலேயே கொடூர மாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு  ஆதித்யநாத் அரசாங்கமே நேரடிப் பொறுப்பு என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சாடியுள்ளது.  இதுதொடர்பாக ஞாயிறன்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள அறிக்கை வருமாறு: காவல்துறையின் காவலில் இருக்கும் போதே ஊடகங்களின் முன்னிலையில் அத்திக்  அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப்பும் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டி ருப்பது, உத்தரப்பிரதேசம் முற்றிலும் சட்டம் - ஒழுங்கு நிலைகுலைந்த ஒரு மாநிலமாக மாறியிருப்பதையே காட்டுகிறது. 

மேற்கண்ட 2 பேரும் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் அந்தக் காவல்துறையினர் முன்னி லையிலேயே படுகொலை செய்யப்பட்டிருப்பது, இச்சம்பவம் அதிகாரப்பூர்வ ஒத்துழைப்புடனே நடந்துள்ளது என்பதையே சுட்டிக்காட்டு கிறது. உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக என்கவுண்ட்டர் என்ற பெயரிலான படுகொலைகள் நடந்து வரும் பின்னணியில் இதைப் பார்க்க வேண்டும். இந்த சம்பவங்கள் முற்றிலும் நீதித்துறைக்கு அப்பாற்பட்ட அப்பட்டமான படுகொலைகளே ஆகும். இத்தகைய நிலைமைக்கு ஆதித்யநாத் அரசாங்கமே நேரடிப் பொறுப்பு ஆகும்.  இந்தப் படுகொலை தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் பணியில் உள்ள நீதிபதி தலைமை யில் ஓர் உயர்மட்ட விசாரணை நடத்திட வேண்டும். இதில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.