states

ராமர் கோவிலுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் இந்துத்துவா கும்பலைச் சேர்ந்தவர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்  பட்டு இருக்கும் ராமர் கோவி லின் பிரதிஷ்டை விழா ஜனவரி 22-ஆம்  தேதி நடைபெறுகிறது.

இந்த விழா வில் அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து  கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் உத்த ரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தை கொன்று, அயோத்தி ராமர் கோவிலை  வெடிகுண்டு வீசி தகர்க்கப்போவதாக முஸ்லிம் நபரின் பெயரில் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் ஒன்று வந்தது. அயோ த்தி பாபர் மசூதி பிரச்சனையை மீண்டும் கிளப்பி ராமர் கோவிலை தகர்க்க முஸ்  லிம்கள் திட்டமிட்டுள்ளதாக பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் குற்றச்சாட்டு என்ற பெயரில் வன் மத்தை பற்ற வைத்தன.

இதனால் அயோத்தியில் பதற்ற மான சூழல் நிலவியது. ராமர் கோவி லில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட நிலை யில், முதல்வர் ஆதித்யநாத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச அரசு அறிக்கை வெளி யிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக  அம்மாநில சிறப்பு புலனாய்வு போலீ சார் விசாரணை மேற்கொண்டு வந்த  நிலையில், கோண்டா பகுதியைச் சேர்ந்த தஹர் சிங், ஓம்பிரகாஷ் மிஸ்ரா என்ற 2 இந்து இளைஞர்கள்தான் முஸ்லிம் பெயரில் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாக அம்மாநில சிறப்பு புலனாய்வு போலீசார் உண்மை யை போட்டுடைத்து, இருவரையும் கைது செய்துள்ளனர்.

இதன்மூலம் ராமர் கோவில் மற் றும் முதல்வர் ஆதித்யநாத்திற்கு மிரட்  டல் விடுத்தவர்கள் முஸ்லிம் அல்ல என  நிரூபணமாகியுள்ள நிலையில், மின்னஞ்சல் மூலம் அயோத்தியில் மதக் கலவரத்தை தூண்டும் இந்துத்துவா  குண்டர்களின் சதி முறியடிக்கப்பட்டுள் ளது.