லக்னோ, ஏப்.10- உத்தரப் பிரதேசத்தில் ராம நவமியின் போது, பசுக்களைக் கொன்றவர்கள் ‘இந்து மகா சபை’ உறுப்பினர்கள்தானே தவிர, இஸ்லாமியர்கள் அல்ல என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதக்கலவரத்தை ஏற்படுத்தும் திட்டத்து டன், தாங்கள்தான் பசுக்களைக் கொன்று, பழியை இஸ்லாமிய இளைஞர்கள் மீது போட்டி ருப்பதாக ‘இந்து மகா சபை’-யினர் போலீ சாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். முன்னதாக, இந்த விவகாரத்தில் இஸ்லா மிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வெளி யாகியிருக்கும் இந்த உண்மை, அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 30 ராம நவமியையொட்டி, குஜராத் மாநிலம் வதோதரா, மகாராஷ்டிர மாநிலம் சத்திரபதி சம்பாஜி நகர், மேற்கு வங்க மாநிலம் ஹவுரா, ஹூக்ளி, உத்தரப்பிர தேச மாநிலம் மதுரா, லக்னோ, பீகார் மாநிலம் சசாராம் ஆகிய நகரங்களில், ‘ராமநவமி’ கொண்டாட்டம் என்ற பெயரில் சங்-பரிவார அமைப்புகள் ஊர்வலங்களை நடத்தினர். இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங் கள், குடியிருப்புகள் இருக்கும் பகுதிகளை தேர்ந்தெடுத்து, இந்த ஊர்வலங்கள் மூலம் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட னர். இதில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. கல்வீச்சு, வீடு, வாகனங்களுக்கு தீ வைப்பு என சம்பவங்கள் அரங்கேறின. ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். தற்போ தும் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்தச் சூழலில்தான், உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள கவுதம் நகர் பகுதி யில் ராமநவமியின் போது 2 பசுக்கள் நடு ரோட்டில் மர்மநபர்களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டன. இது, அப்பகுதி மட்டுமல்லாமல் உ.பி. முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர் பாக, ‘இந்து மகா சபை’ என்ற அமைப்பின் ஜிதேந்திர குஷ்வாஹா, முஸ்லிம் இளை ஞர்கள் மீது புகார் அளித்தார். போலீசாரும் முகமது ரிஸ்வான், முகமது நக்கீம் மற்றும் முகமது ஷானு மற்றும் இம்ரான் குரேஷி ஆகிய நான்கு பேர் மீது ஆக்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் நடத்தப்பட்ட விசா ரணையின் போது, சம்பவம் நடந்த நாளன்று அவர்கள் அப்பகுதியிலேயே இல்லை என்பது தெரியவந்தது. மேலும், சிசிடிவி கேமிராக்களி லும் அவர்கள் பதிவாகவில்லை. இதனால் குழப்பம் அடைந்த போலீசார், சம்பவம் நடந்த நேரத்தில் அங்குள்ள செல் போன் டவர்களில் பதிவான ‘கால் ரெக்கார்டு களை’ (Call Records) சோதனை செய்த போது, ‘இந்து மகா சபை’ உறுப்பி னர்கள்தான் அந்த இடத்தில் வெகுநேரமாக இருந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, போலீசார் அவர் களைப் பிடித்து விசாரித்ததில், ‘தாங்கள்தான் பசுக்களை கொன்றோம்’ என அவர்கள் ஒப்புக்கொண்டனர். இந்து - முஸ்லிம்கள் இடையே கலவரத்தை உருவாக்குவதற்காக அவர்கள் இப்படி செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ‘இந்து மகா சபை’ நிர்வாகிகள் 2 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். பசுக்களைக் கொல்ல அவர்கள் பயன்படுத்திய வாளை யும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், தலைமறைவான 7 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். பசுக்களை கொன்று மதக்கலவரத்தை ஏற்படுத்தும் இந்த திட்டத்தின் முக்கியச் சதி காரராக சஞ்சய் ஜாட் கண்டறியப்பட்டுள்ளார். இந்து மகா சபையின் தேசிய செய்தித் தொடர் பாளரான இவர், மிரட்டிப் பணம் பறித்த வழக் கில் தற்போதுதான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவரும் இவரது ஆதரவா ளர்களும் மாட்டிறைச்சி கொண்டு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் பணம் பறிப்பதையே ஒரு தொழிலாகவே செய் ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.