லக்னோ, ஜன. 17 - அயோத்தி ராமர் கோயில் திறப்புக்கு, ஏற்கெனவே நான்கு சங்க ராச்சாரியார்களும், இந்து மதத் தலை வர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அயோத்தியில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் விழா விற்குத் தடை விதிக்க வேண்டுமென அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு (PIL) ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், அயோ த்தியில் ராமர் கோவில் கட்டும்பணி முழு மையாக முடிவடையாத நிலை யிலேயே அவசர அவசரமாக ஜனவரி 22 அன்று குடமுழுக்கு விழா நடத்தப் படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச மாநில அரசு மேற் கொண்டு வருகிறது. விழாவில் கலந்து கொள்ள பல்வேறு அரசியல் கட்சி களின் தலைவர்கள், திரைத்துறையினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிலை பிரதிஷ்டைக்கான பூஜைகளும் தொடங்கிவிட்டன. இந்நிலையில், அயோத்தி ராமர் கோவிலில், சிலை பிரதிஷ்டைக்கு தடை விதிக்கக் கோரி அலகாபாத் உயர் நீதி மன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத் பகுதி யைச் சேர்ந்த போலா தாஸ் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், “2024 ஜனவரி 22 அன்று அயோத்தியில் ஒரு மத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டு மானத்தில் உள்ள கோவிலில் ராம் லல்லா (குழந்தை ராமர்) சிலை நிறு வப்படும். விழாவை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் நிகழ்த்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அயோத்தியில் ஜனவரி 22 அன்று நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு சங்கராச்சாரியார்கள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். இந்து மாதங்களில் ஒன்றான ‘பவுஷ்ய’ மாதத்தில் எந்த மத நிகழ்வுகளும் நடத்தப்படுவது இல்லை.
மேலும் கோவில் கட்டுமானம் இன்னும் முழுமையடையாமல் உள் ளது. முழுமையடையாத கோவிலில் எந்த தெய்வத்தையும் பிரதிஷ்டை செய்ய முடியாது என்று அவர்கள் கூறி யிருக்கின்றனர். அத்துடன், தெய்வ பிர திஷ்டை சனாதன மரபுக்கு எதிராக உள்ளது. இந்த விழாவை மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக நடத்துகிறது. எனவே, இந்த விழாவிற்கு தடை விதிக்க வேண்டும்” என போலா தாஸ் குறிப்பிட்டுள்ளார். பரபரப்பை கிளப்பியுள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.