லக்னோ, ஜன.7- “அயோத்தியில், தலித் மக்களின் நிலத்தை மகரிஷி ராமாயண வித்யா பீட அறக்கட்டளை வாங்கியது செல் லாது” என்று அயோத்தியில் உள்ள உதவிப் பதிவாளர் நீதிமன்றம் அறி வித்துள்ளது. மேலும், அந்த நிலத்தை அரசாங்கத்திடமும் ஒப்படைத்து, நட வடிக்கை எடுத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத் தியைச் சேர்ந்த மகரிஷி ராமாயண வித்யாபீட அறக்கட்டளை (MRVT), ராமர் கோயில் கட்டப்படும் இடத்தி லிருந்து 5 கி.மீ. சுற்றளவிற்குள் இருக் கும் பர்ஹாதா மஞ்சா உள்ளிட்ட கிரா மங்களில் வசிக்கும் தலித் மக்களிடமி ருந்து, சுமார் 52 ஆயிரம் சதுர மீட்டர் நிலத்தை (சுமார் 12 ஏக்கர்), முறை கேடான வகையில் அபகரித்தது. தற்போதைய அரசாங்க மதிப்புப் படியே ரூ. 3 கோடியே 90 லட்சம் முதல் ரூ. 8 கோடியே 50 லட்சம் வரை விலை போகும் நிலத்தை வெறும் 6 லட்சத்து 38 ஆயிரத்திற்கு முறைகேடாக விலைக்கு வாங்கியது. இதனை அயோத்தியில் ராமர் கோயில் கட்ட லாம் என்ற தீர்ப்புக்குப் பிறகு, பல கோடி ரூபாய்க்கு விற்று லாபமும் பார்த்தது.
இந்த உண்மைகளை, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு அண்மை யில் வெளிச்சத்திற்கு கொண்டு வந் தது. முன்னதாக, தலித் உரிமையா ளர்களில் ஒருவரான மகாதேவ் 2019-ஆம் ஆண்டு, வருவாய் வாரியத்தில் முதன்முதலாக புகார் அளித்தார். அதன்பேரில் அயோத்தி மண்டல வரு வாய் ஆணையரால் அமைக்கப்பட்ட குழு, விசாரணை நடத்தி முறைகேடு நடந்தது உண்மைதான் என்று அண் மையில் அறிக்கை அளித்தது. அயோத்தி உதவிப் பதிவாளரான (ஏஆர்ஓ) பான் சிங்கும் இந்த அறிக் கையின் பேரில் விசாரணை நடத்தி வந்தார். அதைத்தொடர்ந்து தற்போது, சுமார் 52 ஆயிரம் சதுர மீட்டர், தலித் நிலத்தை ஆகஸ்ட் 22, 1996 அன்று மக ரிஷி ராமாயண வித்யாபீட அறக்கட்ட ளைக்கு (எம்ஆர்விடி) மாற்றிய அர சாங்க உத்தரவு ‘சட்டவிரோதமானது’ எனக் கண்டறியப்பட்டு உள்ளதாக வும், எனவே, அந்த நிலங்களின் பத்திரப் பதிவு செல்லாது என்றும் அறிவித்துள்ளார். அனைத்துத் தடை களிலிருந்தும் விடுவிக்கப்பட்ட நிலத்தை மாநில அரசிடமும் ஒப்ப டைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், 1996-ஆம் ஆண்டு சர்வே- நைப்-தாசில்தாராக இருந்த கிருஷ்ண குமார் சிங் மீது நடவடிக்கை எடுக்க துணைப் பிரிவு மாஜிஸ்திரேட்டுக்கு (SDM) பரிந்துரைத்துள்ள பான் சிங், ராமாயண வித்யாபீட அறக்கட்ட ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என்றும் கூறி யுள்ளார்.