லக்னோ, நவ. 24 - உ.பி.யில் ‘அக்னிவீரர்’ தேர்வு க்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டா தது குறித்து, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் பேட்டி அளித்து ள்ளார். “நாட்டுக்கு சேவை செய்வ தற்கு விரும்புபவர்கள் ‘அக்னிவீரர்’ களாக மாற மாட்டார்கள்” என்று அந்த பேட்டியில் அவர்கூறியுள்ளார். இந்திய ராணுவத்திற்கு 4 ஆண்டு காண்ட்ராக்ட் அடிப்படை யில் ஆளெடுக்கும் ‘அக்னிபாத்’ எனும் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தது. 4 ஆண்டு களுக்குப் பின், இவர்களுக்கு மற்ற ராணுவத்தினருக்கு வழங்கப்படு வதை போன்ற ஓய்வூதியமோ, பணிக்கொடையோ வழங்கப்படாது. அவர்கள் ராணுவத்தில் இருந்து வெளியேறும் போது ரூ. 11 லட்சம் மட்டும் வழங்கப்படும் என அரசு கூறி யது. இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. ரயில்கள், பேருந்துகள், பாஜக தலைவர்களின் வீடுகள் அடித்து நொறுக்கி தீவைக்கப்பட் டன. எனினும், இந்த அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு விடாப்பிடி யாக செயல்படுத்தி வருகிறது. முத லில், இந்தத் திட்டத்தின் கீழ் இளை ஞர்கள் அதிக அளவில் சேர முன்வந்த னர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல, இந்த திட்டத்துக்கு இளைஞர் மத்தி யில் வரவேற்பு குறைந்திருக்கிறது. கடந்த மாதம் உத்தரப் பிரதேசத்தில் பல இடங்களில் நடந்த அக்னிபாத் தேர்வுகளில் மிக மிக குறைவான எண்ணிக்கையிலேயே இளைஞர்கள் கலந்து கொண்டனர். சில இடங்களில் ஒருவர் கூட இந்தத் தேர்வில் பங்கேற்கவில்லை. இந்நிலையில்தான், அக்னிபாத் திட்டம் குறித்து, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “அக்னிபாத் திட்டம் இளைஞர்களையும், இந்த நாட்டையும் சீரழிக்கும் ஒரு மோசடித் திட்டம். எனவேதான், அந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதே, அதனை சமாஜ்வாதி கட்சி கடுமையாக எதிர்த்தது. உத்தரப் பிரதேச இளைஞர்கள் இயற்கை யாகவே நாட்டுப் பற்று மிக்கவர்கள். அவர்கள் இந்தியாவுக்கு உயிரை விடவும் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் முழு நேரமும் நாட்டை காப்பாற்ற துடித்துக் கொண்டி ருக்கிறார்கள். அப்படிப்பட்ட தேச பக்தர்களை ராணுவத்தில் முழு நேரமாக சேர்க்காமல் தற்காலிகமாக சேர்க்கிறோம் என ஒன்றிய அரசு கூறுகிறது. 4 ஆண்டுகள் ராணு வத்தில் பணியாற்றித் திரும்பிய பிறகு, இவர்களின் வாழ்வாதா ரத்திற்கு யார் பொறுப்பேற்பார்கள்? தற்போது ஒன்றிய அரசின் இந்த மோசடியை உத்தரப்பிரதேச இளைஞர்கள் உணர்ந்துவிட்டனர். அதனால்தான், இந்த அண்மையில் நடைபெற்ற அக்னிபாத் தேர்வு முகாமில் இளைஞர்கள் பங்கேற்க வில்லை” என்று கூறியுள்ளார். மேலும், “அக்னிபாத் திட்டம் மூலம் இளைஞர்களை மட்டுமல்ல, ஒன்றிய பாஜக அரசானது நம் நாட்டையே ஆபத்தில் சிக்க வைக்கிறது. இதுகுறித்து கேட்டால், நாட்டின் நிதிநிலையை காக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதாக அரசு கூறுகிறது. முதலில் நாட்டை காப்பாற்றினால் தானே நிதியை காப்பாற்ற முடியும்?” என்று கேள்வி எழுப்பியிருக்கும் அகிலேஷ், “நாட்டுக்காக உண்மையில் சேவையாற்ற விரும்புபவர்கள், அக்னிவீரர்களாக மாற மாட்டார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.