states

img

ராஜஸ்தானில் தவியாய் தவிக்கும் பாஜக

ராஜஸ்தான், மத்தியப்பிர தேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாய் ஞாயிறன்று தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஒருவாரத்தை கடந்தும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் பாஜக திணறி வருகிறது.

மத்தியப்பிரதேசத்தில் சிவ்ராஜ்  சிங் சவுகான், ஒன்றிய முன்னாள்  அமைச்சர்கள் பிரகாலத் படேல்,  நரேந்திர தோமர், மூத்த தலை வர்கள் விஜய் வர்கியா, விடி சர்மா  என 6 பேர் முதல்வர் பதவிக்கு முட்டி  மோதி வருகின்றனர். அதே போல  ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னாள்  முதல்வர் வசுந்தரா ராஜே, சாமியா ரான பாபா பாலக்நாத், ஒன்றிய அமைச்சர்கள் கஜேந்திரசிங் செகா வத், அர்ஜுன் மேக்வால், தேர்தலுக்  காக எம்பி பதவியை ராஜினாமா செய்த தியா குமாரி என 5 பேர் முதல்வர் ரேஸில் உள்ளனர்.

ஆர்எஸ்எஸ் உத்தரவு?

ராஜஸ்தானில் முதல்வரை தேர்வு செய்ய 3 நாட்களுக்கு முன் தில்லி பாஜக தலைமையகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்  தில் எவ்வித முடிவும் எடுக்க முடியா மல் கூட்டம் பாதியிலேயே நிறைவு  பெற்ற நிலையில், 4 எம்எல்ஏக் களை ரிசார்ட்டில் கடத்தி வைக்கப் பட்ட நிகழ்வும் தலைநகர் ஜெய்ப்பூ ரில் அரங்கேற்றியது. இந்நிலையில்,  சாமியாரான பாபா பாலக்நாத்தை முதல்வராக நியமிக்க பாஜகவிற்கு ஆர்எஸ்எஸ் மறைமுகமாக உத்தர விட்டுள்ளதாகவும், அவர்தான் ராஜஸ்தானின் முதல்வர் என தக வல் வெளியாகியது. 

இரண்டாக உடைகிறது?
பாஜகவின் தாய் அமைப்பான  ஆர்எஸ்எஸ் உத்தரவிட்டால் பாஜக மேலிடம் கண்டிப்பாக அதை செயல்படுத்தும் நடைமுறை வழக்  கமானது என்ற நிலையில், பாபா  பாலக்நாத் முதல்வர் ஆவதை தடுக்  கும் நோக்கில் முன்னாள் முதல்வ ரான வசுந்தரா ராஜே எம்எல்ஏக் களை வளைக்கும் திட்டங்களை கையிலெடுத்துள்ளார். ராஜஸ்தா னில் பாஜக வெற்றி பெற்ற நாளில்  வசுந்தரா ராஜேவுடன் 20 முதல் 25 எம்எல்ஏ-க்கள் மட்டுமே இருந்த  நிலையில், அடுத்த 7 நாட்களில் அவருக்கு ஆதரவாக 70 எம்எல்ஏக் கள் களமிறங்கியுள்ளனர். இதற்கு ஆதாரமாக ஞாயிறன்று வசுந்தரா ராஜே வீட்டில் நடைபெற்ற கூட்  டத்தில் 70 எம்எல்ஏ-க்கள் (ஏபிபி இந்தி) கலந்து கொண்ட தாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்த லில் தேர்தல் நடத்தப்பட்ட 199  இடங்களில் பாஜக 115 இடங்களில்  வென்றது. இதில் முதல்வர் பதவி  கோரி 70 எம்எல்ஏக்கள் வசுந்தரா ராஜே பக்கம் இருக்கின்றனர். மீத முள்ள 45 எம்எல்ஏக்களில் 30 எம்எல்ஏக்கள் மாநில பாஜக முதல் வர் தேர்வில் என்ன நடக்கிறது எனப் புரியாமல் உள்ளனர். வசுந்  தரா ராஜேவுக்கு முதல்வர் பதவி  அளிக்கவில்லை என்றால் ராஜஸ் தானில் பாஜக இரண்டாக உடை யும் அபாயம் ஏற்படும் என அர சியல் வல்லுநர்கள் தகவல் தெரி வித்துள்ளனர்.

வசுந்தரா ராஜே எம்எல்ஏக்களை வளைக்கும் திட்டங்களை கையிலெடுத்துள்ளார். ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்ற நாளில் வசுந்தரா ராஜேவுடன் 20 முதல் 25 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்த நிலையில், அடுத்த 7 நாட்களில் அவருக்கு ஆதரவாக 70 எம்எல்ஏக்கள் களமிறங்கியுள்ளனர்.