states

img

ராமர் கோவில் திறப்பு: ராஜஸ்தானில் இறைச்சி கடைகளை மூடவேண்டுமாம்!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி, வரும் 22ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இறைச்சி கடைகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கட்டுமானம் முழுமையாக முடிக்கப்படாத நிலையிலேயே, ஜனவரி 22-இல் திறக்கப்பட உள்ளது. ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி, வரும் 22ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இறைச்சி கடைகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, உத்தரப்பிரதேச அரசு ராமர் கோவில் திறப்பு தினத்தன்று இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டிருந்தது.

அயோத்தியில் கோவில் திறந்தாலும், ராஜஸ்தான் மற்றும் சில இடங்களில் இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

;