ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் களமிறங்கி மல்கேரா பத்ரா தொகுதியின் எம்எல்ஏ-வாக இருக்கும் பல்வான் பூனியா, வரவிருக்கும் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதனையொட்டி புதனன்று மல்கேரா பத்ராவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வான் பூனியாவுக்கு ஆதரவு அளிப்போம் என முழங்கினர்.