ராஜஸ்தானில் நவம்பர் 25 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் உள்ள 17 தொகுதிகளிலும் மக்கள் பேராதரவு அளித்து வருகின்றனர். (படம் 1) தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள பல்வான் புனியா போட்டியிடும் பத்ரா தொகுதியில் நடைபெற்ற மிகப்பிரம்மாண்டமான நிறைவுப் பிரச்சாரத்தில், இம்மாநிலத்தில் இதுவரை மற்ற கட்சிகள் நடத்திய பொதுக்கூட்டங்களையெல்லாம் விஞ்சி மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்றனர். கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். (படம் 2) துங்கர்கர் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் கிர்தாரி மகியாவுக்கு ஆதரவாக நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டாக்டர் அசோக் தாவ்லே, ஜக்மதி சங்வான் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.