ராஜஸ்தானில் உள்ள பிரதாப்கர் மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி தெருவில் இழுத்து சென்ற அப்பெண்ணின் கணவர் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தானில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அந்த பெண்ணை அடித்துத் துன்புறுத்தி, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாகக் கொண்டு சென்றுள்ளனர்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதாப்கர் மாவட்ட எஸ்.பி சம்பவம் நடந்த கிராமத்திற்கு நேரில் சென்று விசாரித்ததோடு, குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய 6 தனிப்படைகளையும் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய 10 பேரில் 3 பேரைக் கைது செய்த போலீசார் மேலும் 7 பேரை தேடி வருகின்றனர்.