ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23 அன்று சட்ட மன்ற தேர்தல் நடைபெறு கிறது.பாஜக இரண்டாகப் பிரிந்தி டும் நிலையில், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு கள் தகவல் தெரிவித்துள்ளன. இந் நிலையில், சீட் பிரச்சனையால் அமைச்சர்கள் அடங்கிய ஒரு அணி மற்றும் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஒரு அணி என பாஜக இரண்டா கியுள்ளது. இதனால் தோல்வி பயத்து டன் ராஜஸ்தானில் பாஜக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரி யர்கள் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ் தான் காங்கிரஸ் தலைவரும், முன் னாள் கல்வி அமைச்சருமான கோவிந்த் சிங் தோதாஸ்ரா வீட்டில் வியாழ னன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. தொடர்ந்து தௌசாவில் உள்ள மஹுவா தொகுதி காங்கி ரஸ் வேட்பாளர் ஓம்பிரகாஷ் ஹட்லா மற்றும் சில காங்கிரஸ் தலைவர் களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. மேலும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் மொரிஷியஸ் நாட்டை தலை மையிடமாகக் கொண்டு செயல்படும் ‘விஷ்னார் ஹோல்டிங்ஸ்’ என்ற நிறு வனத்திடம் இருந்து சட்ட விரோத மாக நிதியை பெற்றதாகக் கூறி அவ ருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அரசியல் ஆதாயங்களுக்காக இந்த சோதனை நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள் ளன. வாக்குப்பதிவு நடைபெற ஒரு மாதமே உள்ள நிலையில் அம லாக்கத்துறையின் இந்த நடவ டிக்கை மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமலாக்கத்துறை சோதனை யை கண்டித்து, ஜெய்ப்பூர் அம லாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.