ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25 அன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 17 பேர் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், நோஹர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் மங்கேஜ் சவுத்ரி ஆயிரக்கணக்கான மக்களுடன் பேரணியாக சென்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். தொடர்ந்து நோஹர் கோட்டைப் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.