சமீபத்தில் நிறைவுபெற்ற ராஜஸ் தான் சட்டமன்ற தேர்தலில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆட்சியை சிக்கலின்றி கைப்பற்றினாலும் முதல் வர் பதவிக்காக முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, ஒன்றிய அமைச்சர்கள் அர்ஜுன் மேவால், கஜேந்திர சிங் செகா வத், திவ்யா குமாரி, பாலக்நாத் ஆகிய 5 பேர் போட்டியில் உள்ளனர். இதனால் முதல்வர் யார் என்பதில் பல்வேறு சிக் கல் நீடித்து வரும் ந்நிலையில், கிஷன் கஞ்ச் தொகுதியில் வென்ற பாஜக எம்எல்ஏ லலித் மீனாவை முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் மகனும், எம்பி யுமான துஷ்யந்த் சிங் கடத்தியதாக, லலித் மீனாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாருக்கு பின்னர் லலித் மீனா வீடு வந்து சேர்ந்த நிலையில், ஜெய்ப்பூ ரில் உள்ள ரிசார்ட்டில் தன்னுடன் மேலும் 4 பாஜக எம்எல்ஏ-க்கள் கடத்தி வைக்கப் பட்டு இருந்தனர் என்று லலித் மீனா தக வல் தெரிவித்துள்ளார்.