இந்தியா கூட்டணி சார்பாக ராஜஸ் தான் மாநிலம் சிகார் மக்கள வைத் தொகுதியில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேட்பாளர் அம்ரா ராம் வெற்றிக் கனியைப் பறிக்கும் நிலையில் உள் ளார் என்று ஊடகங்கள் கருத்து தெரி வித்துள்ளன.
தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில், “கடுமையான சவாலை பாஜகவுக்கு காங்கிரஸ் கூட் டணி ஏற்படுத்தியிருக்கிறது. நாகோர் தொகுதியில் ராஷ்டிரிய லோக்தாந்தி ரிக் கட்சியின் ஹனுமான் பெனிவால் மற்றும் சிகார் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அம்ரா ராம் ஆகிய இருவருக்கும் காங்கி ரஸ் ஆதரவு அளித்துள்ளது. காங்கிரஸ் மீது கடுமையான அதிருப்தி கொண்ட ஜாட் சமூக மக்கள், தங்கள் ஆதரவை பாஜக பக்கம் திருப்பினர். 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் ஒட்டுமொத்த மாக அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. இந்த முறை அம்ரா ராம் மற்றும் பெனிவால் ஆகிய இருவருக்கும் அளித்துள்ள ஆதரவு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகி றது” என்று கூறியுள்ளது.
மேலும் அந்த செய்திக்கட்டுரையில் “ஷெகாவத் பகுதி என்றழைக்கப்படும் பல மாவட்டங்களில் பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை, வேளாண் விளை பொருட்களுக்கு நல்ல விலை, தேர்தல் பத்திரங்கள், அக்னிவீர் திட்டம் மற்றும் அண்மையில் நடந்த மல்யுத்த வீரர் களின் போராட்டம் ஆகியவை பேசு பொருள்களாக மாறியிருக்கின்றன. குறிப்பாக, ஜாட் சமூக மக்களிடம் இந் தப் பிரச்சனைகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இவர்கள் மாநில மக்கள் தொகையில் 14 விழுக்காடு என் பது குறிப்பிடத்தக்கது.” என்று தி இந்து நாளிதழ் கூறியிருக்கிறது.
இளைஞர்கள் அதிருப்தி
அக்னிவீர் திட்டம் பாஜகவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல ஊட கங்கள் கருத்து தெரிவித்துள்ளன. சிகார் தொகுதியைச் சேர்ந்தவரும், அரசியல் விமர்சகருமான அஷ்பக் காயம்கனி, “ஜாட் சமூகத்தில் ஒவ்வொரு குடும்ப மும் ராணுவத்துடன் தொடர்பு கொண்ட தாக இருக்கும். ராணுவத்தில் சேர இளைஞர்களைத் தயார் செய்யப் பல் வேறு பயிற்சி மையங்களும் இயங்கி வந்தன. அக்னிவீர் திட்டம் நடை முறைக்கு வந்துள்ளதால் அவை தற் போது மூடப்பட்டுள்ளன. இந்தப் புதிய திட்டத்தின் மீது இளைஞர்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது” என்கிறார்.
ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களும் கணிசமான அளவில் இந்த மாவட்டங்களில் இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவு தேர்தல் முடிவு களை மாற்றக்கூடியதாக அமையும். ஷெகாவத் பகுதியில் உருவாகும் இந்த மாற்றம் ஜெய்பூரின் புறநகர், அல்வார் மற்றும் ஜாலோர்-சிரோகி ஆகிய பகுதி களிலும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகி றது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
நாட்டு விடுதலைக்குப் போராடாத ஆர்எஸ்எஸ்
ராஜஸ்தானில் நடைபெறும் ராணுவ சேர்க்கையில் சிகார், சுரு மற்றும் ஜூன்ஜூனு மாவட்டங்களில் இருந்துதான் அதிகமாக இளைஞர்கள் இணைவார்கள். இந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமப் பள்ளிக்கூட மும் ராணுவத்தில் பணியாற்றுகையில் உயிரிழந்த தியாகிகளின் பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது.
அக்னிபாத் திட்டத்திற்கு அதைக் கொண்டு வரும்போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அம்ரா ராம் கடும் எதிர்ப்பு தெரி வித்தார். அது குறித்து அவர், “அக்னிபாத் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகும். இத்தகைய திட்டங்களைப் பார்த்து ஆச்சரி யப்பட வேண்டாம் என்று மக்களிடம் சொல்கிறோம். நாட்டின் விடுதலைப் போரில் ஆர்எஸ்எஸ் பங்கேற்கவில்லை. தற்போது மிகச்சில முதலாளி களுக்காக பாஜக சேவை செய்து வருகிறது” என்றார்.