states

img

ராஜஸ்தான்: 24மணி நேரத்தில் 9குழந்தைகள் பலி

ராஜஸ்தானில் 24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஜே.கே லன் மருத்துவமனையில் டிசம்பர் 10ம் தேதி 24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்தன. இதில் 3 குழந்தைகள் பிறவிக்குறைபாட்டாலும், 3குழந்தைகள் பிறந்தவுடன் இறந்துள்ளன. மேலும் 3குழந்தைகளின் நுரையீரலுக்குள் தாய் பால் சென்றதால் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. இந்த குழு 3நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
கடந்த ஜனவரி மாதம் ஜேகேலோன் மருத்துமனையில் 100 குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.