states

img

இந்தியாவின் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்திய ஆர்எஸ்எஸ் பேர்வழி!

மும்பை, மே 20 - டிஆர்டிஓ இயக்குநராக இருந்துகொண்ட, இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்திவந்த பிரதீப் குருல்கர், தீவிரமான ஆர்எஸ்எஸ் பேர்வழி என்றும், இவரது குடும் பத்தினர் தலைமுறை தலைமுறையாக இந்துத் துவா விஷத்தை நாட்டில் தூவி வருபவர்கள் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள இந்தி யப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்திற்கு (Defence Research and Development Organisation - DRDO) சொந்த மான ஆய்வகத்தில் இயக்குநராக பணியாற்றி  வந்தவர் பிரதீப் குருல்கர் ஆவார். புனே பொறி யியல் கல்லூரி தொழில்நுட்பப் பல்கலைக்கழ கத்தில் (COEP) பி.இ. எலக்ட்ரிக்கல் இன்ஜினி யரிங் பட்டம் பெற்றவரான குருல்கர், 1988 முதல் டிஆர்டிஓ-வில் பணியாற்றி, தற்போது மூத்த விஞ்ஞானியாக உள்ளார்.  டிஆர்டிஓ-வின் திட்டங்கள் பலவற்றில், இவர்தான் முக்கியப் பங்கு வகித்து வந்துள்ளார். வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில், பல்வேறு வகைகளிலும் பங்களிப்பை செலுத்தியுள்ளார். இதுதவிர, ராணுவ பொறியியல் அமைப்புகள் மற்றும் உபகரணங்களை வழங்குவதும் பிரதீப் குருல்கரின் முக்கியமான பணிகளாகும். இந்நிலையில்தான், இவர், தனக்குத் தெரிந்த இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்தி வந்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவரிடமிருந்து பாகிஸ் தானை சேர்ந்த உளவு அமைப்பினர் இந்திய ராணுவம் குறித்த ரகசியத் தகவல்களை பெற்று வந்துள்ளனர்.  இதற்காக சில பெண்களை அவர்கள் பயன் படுத்தியுள்ளனர். அதாவது, பிரதீப் குருல்கரிடம் பெண்களை அந்தரங்கமாக பேசிப் பழக வைத்து, அதன்மூலமாக தங்களின் வலையில் வீழ்த்தியுள்ளனர். பிரதீப் குருல்கரும் பாகிஸ் தான் உளவு ஏஜெண்ட்டிடம் தொடர்ந்து வாட்ஸ்ஆப் மூலம் இந்திய ராணுவம் குறித்த ரகசியங்களைப் பகிர்ந்து வந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவு (Anti Terrorist Squad - ATS) போலீசார், இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் ஆய்வக இயக்குநர் பிரதீப் குருல்கரை, கடந்த மே 3-ஆம் தேதி மிகவும் தாமதமாகக் கண்டுபிடித்துக் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, வெளி நாட்டுப் பயணத்தின் போதும், சிலரிடம் குருல்கர் ராணுவ ரகசியங்களை தெரிவித்தது தெரிய வந்தது. இவை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குருல்கரை மே 29 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்தான், பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களைக் கடத்திவந்த பிரதீப் குருல்கர், தீவிர ஆர்எஸ்எஸ்-காரர் என்ற உண் மையும் அண்மையில் அம்பலத்திற்கு வந்தது. “பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிக்கு ரகசியத் தகவலைத் தெரிவித்ததற்காக மகா ராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படையால் கைது செய்யப்பட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானி, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (RSS) தொடர்பு ையவர்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பா ளர் பவன் கேரா, அண்மையில் பகிரங்கப் படுத்தினார். “டிஆர்டிஓ விஞ்ஞானி பிரதீப் குருல்கர் கைது செய்யப்பட்டது ‘மிகவும் தீவிர மான விஷயம்’” என்றும், “இது ஆர்எஸ்எஸ்-ஸின் ‘தேச விரோத முகத்தை’ அம்பலப்படுத்தி இருக்கிறது” என்றும் அவர் கூறினார்.  “ஆர்எஸ்எஸ் தன்னார்வத் தொண்டர்களின் தலைவரும், டிஆர்டிஓவின் ஆர் அண்ட் டி (பொறியியல்) இயக்குநருமான பிரதீப் குருல்கர், பாகிஸ்தானின் சார்பில் உளவு பார்த்ததற்காக மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை யால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ‘ஆர்எஸ் எஸ் ஒரு தேசியவாத அமைப்பு’ என்று கூறப்படுவது பொய்யானது மற்றும் கேலிக் கூத்தானது” என்றும் சாடியுள்ளார்.

மேலும், இந்த விவகாரம், தேசப் பாதுகாப்பு தொடர்பான விஷயமாக இருப்பதால், குருல்க ருக்கும் ஆர்எஸ்எஸ்-ஸுக்கும் என்ன தொடர்பு? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதிலளிக்க வேண்டும் என்றும் கேரா வலியுறுத்தியுள்ளார். முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது, குருல்கர் ஒரு ஆர்எஸ்எஸ் நிகழ்வில் உரையாற்றிய வீடியோவை வெளியிட்ட பவன் கேரா, “குருல்கருக்கு ஆர்எஸ்எஸ் உட னான தொடர்பு தலைமுறை தலைமுறையாக உள்ளது. அவரது தாத்தா ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டர் ஆவார், அவர் கணிதவியலாளராக பணியாற்றினார், மேலும் குருல்கரின் தந்தை யும் ஆர்எஸ்எஸ்-சிற்காக பணியாற்றினார்” என்ற தகல்களையும் வெளியிட்டார். “இந்த நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இந்த பிரச்சனையை ஊடகங்கள் உரிய முறையில் மக்களிடம் கொண்டு செல்லவில்லை என்றும், இதே குருல்கர் ஒருவேளை காங்கிரஸ் கட்சியிலோ, அல்லது வேறு எந்த எதிர்க்கட்சி யிலோ தொடர்பில் இருந்திருந்தால், தேசிய ஊடகங்கள் இந்தப் பிரச்சனையை எந்தள விற்கு ஊதிப் பெரிதாக்கி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்?” என்றும் கேரா சுட்டிக்காட்டியுள்ளார்.