states

img

நீதிமன்ற நிகழ்வுகளின்போது பூஜைகளை நிறுத்துங்கள்! - உச்சநீதிமன்ற நீதிபதி அபாய் எஸ் ஓகா

நீதிமன்ற நிகழ்வுகளின்போது மத பூஜைகளை நிறுத்திவிட்டு, அரசியலமைப்புக்கு தலைவணங்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி அபாய் எஸ் ஓகா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட்டில் கடந்த 3-ஆம் தேதி புதிய நீதிமன்ற கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி அபாய் எஸ் ஓகா,  நீதிமன்ற நிகழ்வுகளின்போது மத பூஜைகளை நிறுத்திவிட்டு, அரசியலமைப்புக்கு தலைவணங்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது, மத நிகழ்ச்சிகளைக் குறைக்க பலமுறை முயன்றதாகவும், ஆனால் அவற்றை முழுமையாக நிறுத்த முடியவில்லை என்றும், அரசியலமைப்பு அமலாகி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் மதச்சார்பின்மையை முன்னெடுப்போம் என்றும் நீதிபதி ஓகா தெரிவித்துள்ளார்.