states

எம்.பி. பதவி ஆசை காட்டி முன்னாள் முதல்வரை இழுத்த பாஜக

“இந்தியா” கூட்டணி எழுச்சியால்  அஞ்சி வரும் பாஜக பல்வேறு  சித்து விளையாட்டுகளை அரங்கேற்றி வருகிறது. மத்திய அமைப்பு களின் விசாரணை கைது மிரட்டல் மற்றும்  பாரத ரத்னா விருதுகள் மூலம் “இந்தியா”  கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம், ஆர்எல்டி ஆகிய கட்சிகளை  இழுத்த பாஜக, இதே பாணியில் தெலுங்கு தேசத்தையும் இழுத்துள்ளது.

மோடி அரசின் மிரட்டல் மற்றும் சதி  வேலைகளுக்கு அடிபணியாமல்  “இந் தியா” கூட்டணியிலேயே நீடிக்கும் கட்சித்  தலைவர்களை மாநிலங்களவை எம்பி  பதவி அளித்து தங்கள் பக்கம் இழுக்கும்  வேலையையும் பாஜக துவங்கியுள்ளது. முதல்கட்டமாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவரு மான அசோக் சவானிடம் மாநிலங்க ளவை பதவிக்கான வேட்பாளராக கள மிறக்குகிறோம் என்று கூறி, அவரை பாஜக தங்கள் பக்கம் இழுத்துள்ளது. 

இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் சார்பில் செவ்வாயன்று  மதியம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரும் மக்களவை தேர் தல் வரை கவனமாக இருக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.