மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இட ஒதுக்கீடு தர கடந்த 2018-இல் மகாராஷ்டிரா அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இது வெறும் அறிவிப்பாகவே உள்ள நிலை யில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மராத்தா ஆர்வலரான மனோஜ் ஜாரங்கே ஜல்னா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்த உண்ணாவிரதப் போராட்டம் 10 நாட்களுக்கு மேல் நீண்ட நிலையில், மனோஜ் ஜாரங்கேவின் உடல்நிலை மோசமடைந்தது. இதனால் மகா ராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் தீர்வு காணப்படும் என அறிவித்தார்.
ஆனால் 2 மாத காலமாகியும் மகா ராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு எவ்வித நட வடிக்கையும் எடுக்காததால், ஜனவரி 20-ஆம் தேதி முதல் மும்பையை நோக்கி நடைபயணம் மேற்கொண்டு குடியரசு தினத்தன்று மும்பையில் பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்படும் என அறிவித் தார். அறிவித்தது போலவே மனோஜ் ஜாரங்கே ஜல்னா மாவட்டத்தில் இருந்து ஜனவரி 20-ஆம் தேதி மும்பை நோக்கி நடைபயணத்தைத் தொடங்கினார். இந்நிலையில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 750 வாகனங்களில் அணி வகுத்து வந்த இந்த நடைபயணம் புத னன்று புனே நகரை அடைந்தது. தற்பொ ழுது மும்பையை நோக்கி வருகிறது.
இத னால் மும்பை நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.