states

முதல் முயற்சியிலேயே ககன்யான் திட்டம் வெற்றி பெறும் இஸ்ரோ நம்பிக்கை

மும்பை, டிச.18-  ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி உள்ளன. இந்த சாதனையை எட்ட  இந்தியா தீவிர முயற்சிகளை செய்து வரு கிறது.  இதன்படி கடந்த 2007-ஆம் ஆண்டில் ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனி தர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டு, 2014-ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கு ககன் யான் என்று பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவி ரப்படுத்தப்பட்டன.  இதுதொடர்பாக இஸ்ரோவின் திரவ எரி பொருள் திட்ட இயக்குநர் வி.நாராயணன் கூறு கையில், ‘‘ககன்யான் திட்டத்திற்காக இதுவரை 195 வகையான சோதனைகள் நடத்தப்பட்டுள் ளன. இதில் 164 சோதனைகள் வெற்றி பெற்றுள்  ளன.  விண்வெளிக்கு அனுப்பப்படும் இந்திய வீரர்கள் 2 வாரங்கள் விண்வெளியில் ஆய்வு  செய்து விட்டு, பூமிக்கு பத்திரமாக திரும்பு வார்கள். ககன்யான் திட்டம் இந்தியாவின் கனவு திட்டமாகும். முதல் முயற்சிலேயே வெற்றிகர மாக திட்டத்தை செயல்படுத்த தீவிர முயற்சி செய்து வருகிறோம். இந்த முயற்சியில் நிச்ச யம் வெற்றி பெறுவோம்’’ என தெரிவித்தார்.