நாட்டின் பிரபல ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செயலியான பேடிஎம் தணிக்கை விதிகளை மீறி பணமோசடி செய்துள்ள தாக பிப்ரவரி 1-ஆம் தேதி ரிசர்வ் வங்கி தடை உத்தரவை பிறப்பித் தது. பேடிஎம்-க்கு விதிக்கப்பட் டுள்ள தடையானது வரும் பிப்.29- ஆம் தேதி முதல் அமலுக்கு வர வுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அமைதியாக இருப்பது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், பேடிஎம் நிறு வனர் விஜய் சர்மா மோடியின் பக்த ராக இருப்பதால் பேடிஎம் மீது அம லாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வில்லையா? என காங்கிரஸ் கட்சி யின் தலைமை செய்தி தொடர்பா ளர் சுப்ரியாஸ்ரீனடே கேள்வி எழுப்பி யுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகை யில்,”பணமோசடி விவகாரத்தின் மூலம் தடை உத்தரவை பெற்றுள்ள பேடிஎம் மீது அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுத்தது? இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மற்றும் அமலாக்கத்துறையின் நிலைப்பாடு என்ன? பேடிஎம் மீதான விதிமீறல் புகார் கடந்த 7 ஆண்டுகளாக வட்ட மடித்தாலும், அமலாக்கத்துறை அமைதியாக இருந்ததன் ஒரே கார ணம் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா பிரதமர் மோடியின் பக்தராக இருப்பதால்தான். விஜய் சர்மா பிரதமர் மோடியுடன் செல்பி எடுத் துக்கொண்டு பிரதமருக்கு ஆதர வாக விளம்பரங்களையும் வெளி யிடுகிறார். பேடிஎம் நிறுவனர் விஜய் சர்மா போன்று பிரதமர் மோடியின் கூட்டாளிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும்போது மத்திய விசாரணை அமைப்புகள் ஏன் வாய் திறக்காமல் அமைதியாக இருக்கிறது?” என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.