states

img

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் கருவை கலைக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை ஒரு கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சிறுமியின் மனுவை விசாரித்தது. அந்த சிறுமி மனுதாக்கல் செய்த சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி கர்ப்பமடைந்துள்ளார். கரு உருவாகி 16 ஆவது வாரம் கடந்திருந்த நிலையில் கருவை சுமப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை. இதனால் கருவை கலைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனுவில் கூறியுள்ளார். 
இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏஎஸ் சந்துர்கார் மற்றும் ஊர்மிளா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனு தாரரின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், அரசியல் சாசன பிரிவு 21இன் கீழ் அந்த சிறுமிக்கு கருவை கலைக்க உரிமை உண்டு.

அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி குழந்தை பெற வைக்க முடியாது, குழந்தைப் பேறு வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை தேர்வு செய்யும் உரிமை அவருக்கு உண்டு என நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், மனு தாரர் ஒரு சிறார் என்பதும், அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதும் முக்கிய அம்சம் எனக் கூறியுள்ள நீதிமன்றம், பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட அவரின் மன நலனை புரிந்து கொள்ள முடிகிறது என நீதிமன்றம் கூறியுள்ளது