states

தலித் மாணவர் தர்ஷன் சோலங்கி தற்கொலை சம்பவத்தில் சாதியப் பாகுபாடு

மூடிமறைக்கும் மும்பை ஐஐடி?

மும்பை, பிப். 15 - மும்பை ஐஐடி-யைச் சேர்ந்த தலித் மாணவர் தர்ஷன் சோலங்கி, விடுதிக் கட்டட த்தின் 7-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சோலங்கியின் மரணத்திற்கு, ஐஐடி வளாகத்தில் நிலவும் சாதியப் பாகுபாடு, ஒடுக்குமுறைகளே காரணம் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. ஆனால், தலித் மாணவரின் மரணத்திற்கு சாதியப் பாகுபாடு காரணமில்லை என்றும், சொந்த பிரச்சனையாலேயே அவர் தற்கொ லை செய்து கொண்டிருப்பதாகவும் மும்பை  ஐஐடி நிர்வாகம் கூறியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (Indian Institute of Technology - IIT) பி.டெக். முதலாமாண்டு படித்து வந்தவர் தர்ஷன் சோலங்கி (18). தலித் வகுப்பைச் சேர்ந்தவர். மூன்று மாதங்களுக்கு முன்புதான் இங்கு சோலங்கி சேர்ந்திருந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று ஐஐடி வளாக விடுதியின் 7-ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் ஐஐடி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொ லை குறிப்பு எதுவும் கிடைக்காத நிலையில், அவரது மரணத்திற்கான காரணத்தை உறுதிப் படுத்த முடியவில்லை என போலீசார் தெரி வித்தனர். ஆனால், கல்வி வளாகத்தில் சாதிய ரீதியாக காட்டப்பட்ட பாரபட்சம், அவமா னம் ஆகியவையே மாணவர் சோலங்கியின் தற்கொலைக்கு காரணம் என்று மாண வர்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

நிறுவனக் கொலை

“தலித் மாணவர் தர்ஷன் சோலங்கி யின் மரணம் தனிப்பட்ட விஷயமல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்; ஐஐடி வளாகத்தில் நிலவும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலை, இடஒதுக் கீட்டில் வருபவர்களை தகுதியற்றவர்கள் என்று கூறி அவர்களுக்கு காட்டப்படும் பாகு பாடு, இழைக்கப்படும் சாதிய ரீதியான கொடுமைகள் ஆகியவையே தர்ஷன் சோலங்கியின் மரணத்திற்கு காரணம். இது  ஒரு நிறுவனக் கொலை!” என்று ‘அம்பேத்கர்,  பெரியார், பூலே படிப்பு வட்டம்’ (Ambedkar Periyar Phule Study Circle - APPSC) குற்றம் சாட்டியிருந்தது. மேலும், “இதுதொடர்பாக தலித் மற்றும் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பலமுறை புகார் தெரி வித்திருந்தும், உரிய பாதுகாப்புச் சூழலை ஏற்படுத்த மும்பை ஐஐடி நிர்வாகம் தவறி  விட்டது” என்றும் ஏபிபிஎஸ்சி அமைப்பு தெரி வித்திருந்தது. ஏற்கெனவே இதுபோன்ற  தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளதாக வும் கூறியிருந்தது. இந்நிலையில் மாணவர் தர்ஷன் சோலங்கியின் மரணம் தொடர்பாக விசார ணை நடைபெற்று வருவதாகவும், ஆனால், வளாகத்தில் சாதியப் பாகுபாடு இருப்ப தாகக் குற்றம்சாட்டுவது தவறு  என்றும் மும்பை ஐஐடி மறுப்பு தெரிவித்துள்ளது. “ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப் படையில், தர்ஷன் சோலங்கி சாதியப் பாகு பாடு எதையும் எதிர்கொண்டதாக கண்டறிய வில்லை; கல்லூரி வளாகத்தை முடிந்தவரை அனைவருக்குமானதாக மாற்றுவதற்கு நிர் வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது; மாண வர் சேர்க்கை முடிந்த பிறகு, அவர்களின் சாதி விவரம் கூட யாருக்கும் தெரிவிக்கப்படுவ தில்லை; பாகுபாடுகள் எதையும் மும்பை ஐஐடி நிர்வாகம் பொறுத்துக் கொள்ளாது” என்று மும்பை ஐஐடி இயக்குநர் சுபாஷிஷ் சவுத்ரி கூறியுள்ளார்.

122 பேர் தற்கொலை

ஐஐடி, ஐஐஎம் போன்ற ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடு, சிறுபான்மை மதத்தினருக்கு எதி ரான ஒடுக்குமுறைகளால் மாணவர்கள் தற்கொலை செய்வது நீண்டகால பிரச்சனை யாக உள்ளது. 2014-இல் ஒன்றிய பாஜக அரசு அதிகாரத்திற்கு வந்தபின், இந்த தற்கொலைகள் அதிகரித்துவிட்டன. கடந்த 2014 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மக்களவையில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டது. இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட 122 மாணவர்களில் 24 பேர் பட்டியல் வகுப்பினர். 41 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். இவர்கள் தவிர, பட்டியல் பழங்குடி மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் தலா 3 பேர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.