மும்பை மோடி பிரதமர் ஆன பின்பு எதிர்க்கட்சி களை ஒடுக்கும் ஆயு தமாக அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. பாஜக மற்றும் மோடி அர சுக்கு எதிராக விமர்சிக்கும் எதிர்க் கட்சியினர் மீது அமலாக்கத்துறை யை கட்டவிழ்த்துவிடுவது தற்போது வாடிக்கையாக உள்ளது. கிட்டத் தட்ட மோடி அரசின் அரசியல் ஆயுத மாக அமலாக்கத்துறை மாற்றப் பட்டுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஸ்ரீ சத்ரபதி சிவாஜி கல்விச் சங்கத் தின் இயக்குநர் அப்பாசாகேப் தேஷ்முக்கின் மகன் தீபக் தேஷ்முக் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை யால் கடந்த மாதம் கைது செய்யப் பட்டார். இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் தீபக் தேஷ்முக் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்ற நீதி பதிகள் ரேவதி மோகிதே, பிருத்வி ராஜ் சவான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்குப் பின்பு உயர்நீதிமன்ற நீதிபதிகள், “அமலாக்கத்துறை தனது அதிகா ரத்தை தவறாகப் பயன்படுத்தி கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள் ளது. தங்கள் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப இஷ்டம் போல் அமலாக்கத் துறை செயல்படுவது வாடிக்கையாகி விட்டது. அமலாக்கத்துறையால் 3 முறை சம்மன் அனுப்பப்பட்டும் விசா ரணைக்கு ஆஜராகி மனுதாரர் ஒத்து ழைப்பு அளித்துள்ளார். பிறகு ஏன் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை யில் ஈடுபட்டது. இது சரியானது அல்ல. அதனால் மனுதாரரான தீபக் தேஷ் முக்கிற்கு ஜாமீன் வழங்கப்படு கிறது” என தீர்ப்பு வழங்கினர்.