states

img

ஆபாச வீடியோ விவகாரம் தலைமறைவான பாலியல் பாஜக தலைவர் கிரித் சோமையா தில்லிக்கு ஓட்டம்

மும்பை, ஜூலை 21- ஆபாச வீடியோ விவகாரத்தில் கடந்த 48 மணிநேரமாக தலைமறை வாக இருந்த மகாராஷ்டிரா பாஜக தலைவர் கிரித் சோமையா தில்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் பாஜக துணை தலைவரும், முன்னாள் எம்பியுமான கிரித் சோமையா இருக்கும் 8 மணி நேர ஓடக்கூடிய 35 ஆபாச வீடியோ கொண்ட தொகுப்பு கொண்ட பென்டிரைவ் ஒன்றை பெண் ஓருவர் சிவசேனாவின் (உத்தவ்) எதிர்க் கட்சித் தலைவரான அம்பா தாஸ் தன்வேவிடம் கொடுத்துள் ளார்.  இதனை மகாராஷ்டிரா சட்டப் பேரவை செயலரிடம் அம்பாதாஸ் தன்வே கொடுத்துள்ளார். வீடியோக் களின் உண்மைத் தன்மை குறித்து ஆராய சட்டசபை துணை சபா நாயகர் உத்தரவிட்டுள்ள நிலை யில், அடுத்த சில மணிநேரங்களில் மராத்தி டிவி சேனலான லோக்சாஹி கையில் கிடைக்க, அச்செய்தி நிறுவனம் முக்கியச் செய்தியாக வெளியிட்டது. இதனால் ஆளும் பாஜக கூட்டணி கடும் அதிர்ச்சியில் உறைந்தது.  இதுகுறித்து விளக்கம் கேட்டு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி கள் கேள்வி எழுப்பின. எதிர்க்கட்சி களின் கேள்விக் கணைகளை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய மகாராஷ்டிரா பாஜக துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பெயரளவில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

போராட்டம்

மகாராஷ்டிரா பாஜக தலைவர் கிரித் சோமையாவின் வீடியோ தொடர்பாக  கடுமையான நட வடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்,  சிவசேனா (உத்தவ்) கூட்டணிக் கட்சிகள் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். 

தில்லியில் கிரித் சோமையா?

‘‘தன்னால் எந்த பெண்ணும் பாதிக்கப்படவில்லை’’ எனக் கூறி வீடியோ வெளியான தினத்தன்று துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு கிரித் சோமையா கடிதம் எழுதியுள்ளார். அதன்பிறகு அவரை காணவில்லை. கடந்த  72 மணி நேரமாக பாஜகவினரு டன் தொடர்பில் இல்லாமல் கிரித் சோமையா தலைமறைவாகி விட்டார்.  தில்லியில் தனக்கு நெருக்க மான பாஜக தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள தாக மராத்தி செய்தி நிறுவனமான எஸ்கல் செய்தி வெளியிட்டுள்ளது.


அல்லல்படும் அமலாக்கத்துறை?

மகாராஷ்டிர மாநில பாஜக துணைத் தலைவரும், பாஜக முன் னாள் எம்.பி.யுமான கிரித் சோமை யா, பெண் அரசு அதிகாரிகள் உள்பட பல பெண்களை மிரட்டி தவறான உறவுக்கு அழைத்ததாகவும், ஆசைக்கு பணியாதவர்களிடம் அம லாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயமுறுத்தி பாலியல் அரங்கேற்றங்களை செய்துள்ளார் எனவும் விபரங்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர் பாக வீடியோக்களில் ஆதாரம்  இருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளதாக பல ஊடகங்கள் செய்தி  வெளியிட்டுள்ளன. ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் அமலாக்கத் துறையின் பெயர் தற்போது பாலி யல் வக்கிரங்களுக்கு கூட பயன் படுத்தப்பட்டு வருவதுதான் அதிர்ச்சி கலந்த விஷயமாக உள்ளது.