states

img

மிசோரம் தேர்தல்: ஆட்சியை கைப்பற்றுகிறது சோரம் மக்கள் இயக்கம்!

மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் 27 இடங்கள் வெற்றி பெற்று பெரும்பான்மையில் சோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை கைப்பற்றியது. 
மிசோரம் மாநிலத்தில் 40 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த நவம்பர் 7-ஆம் தேதி நடந்தது. இத்தேர்தலில் 80.43 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதைத் தொடர்ந்து, இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்த சோரம் மக்கள் இயக்கம், மொத்தமுள்ள 40 இடங்களில் 27 இடங்கள் வெற்றி பெற்று பெரும்பான்மையில் ஆட்சியை கைப்பற்றியது. 
முன்னதாக ஆட்சியிலிருந்த மிசோ தேசிய முன்னணி 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், பாஜக 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.