states

img

மிசோரத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அகற்றம்

ஐஸ்வால், டிச. 4 - மிசோரத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அகற்றப்பட்டு, தனிப்பெரும் பான்மையுடன் ஜோராம் மக்கள் இயக்கம் கட்சி ஆட்சி அமைக்கிறது.

5 மாநில தேர்தலில் தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் பதிவாகிய வாக்கு கள் ஞாயிறன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி யும், மத்தியப்பிரதேசம், ராஜஸ் தான், சத்தீஸ்கரில் பாஜகவும் ஆட்சியை கைப்பற்றின.

மிசோரம்
மிசோரம் மாநிலத்தில் கிறிஸ்த வர்கள் பெரும்பான்மையாக வசிப்ப தாலும், ஞாயிறன்று தேவாலயம் செல்லும் வேலையை தவிர வேறு வேலை செய்ய மாட்டார்கள் என்பதா லும் வாக்கு எண்ணிக்கை நாள் திங்க ளன்று (டிசம்பர் 4) தள்ளி வைக்கப் பட்டது.

40 தொகுதிகளை கொண்ட மிசோ ரம் மாநிலத்தில் திங்களன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. எதிர்க்கட்சியான ஜோராம் மக்கள் இயக்கம் தொடக்கம் முதலே முன்னிலை வகித்த நிலையில், அக்கட்சி 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சி 10 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி  ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலை யில், 27 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஜோராம் மக்கள் இயக்கம் மிசோரத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது. 

இதன்மூலம் மிசோரத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அகற்றப்பட்டுள்ள நிலையில், அம்மாநில புதிய முதல்வராக ஜோராம் மக்கள் இயக்கத்தின் தலைவரும், 74 வயது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி யுமான லால்துஹோமா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகிழக்கில் பாஜக கூட்டணிக்கு முதல் விக்கெட்

வடகிழக்கில் 8 மாநிலங்கள் உள்ளன. அதில் அசாம், அருணாச் சலப்பிரதேசம், மணிப்பூர், திரிபுரா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி யும், மேகாலயா, நாகலாந்து, சிக்கிம், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியும் நடை பெற்று வந்தது. இதனால் வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவின் கோட்டை என அக்கட்சி அடிக்கடி பெருமை யாகக் கூறி வந்த நிலையில், மிசோ ரம் மாநிலத்தின் தேர்தல் முடிவு மூலம் வடகிழக்கில் பாஜக கூட்ட ணிக்கு முதல் விக்கெட் விழுந்துள்ளது. 

கடந்த 2018 தேர்தலில் முதல்வர் ஜோரம் தங்காவின் மிசோ தேசிய முன்னணி 26 தொகுதிகளில் வெற்றி  பெற்று ஆட்சி அமைத்தது. 8 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜோரம் மக்கள் இயக்கம் எதிர்க் கட்சியாக இருந்த நிலையில், ஒரே  ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக மிசோ தேசிய முன்னணியுடன் கூட்டணி அமைத்தது. இதன்மூலம் மிசோரமில் கடந்த 5 ஆண்டுகளாக பாஜக கூட்டணி ஆட்சி நடை பெற்றது. 
மேலும் 2 எம்பியை (மக்களவை, மாநிலங்களவை) கொண்ட ஜோரம் தங்காவின் மிசோ தேசிய முன்னணி ஒன்றியத்தில் பாஜகவிற்கு ஆதரவு அளித்தது. தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மணிப்பூர் குக்கி இன மக்களின் விவகாரம் மற்றும் பாஜக மீதான அதிருப்தியால் ஆட்சி பறிபோய்விடும் என அஞ்சி, பாஜக கூட்டணியில் இருந்து வில கல் அறிவிப்பை வெளியிடாமல் பிரதமர் மோடியை மிசோரத்திற்கு பிரச்சாரம் செய்ய விடாமல் தவிர்த்தார். எனினும் மிசோரம் மக்களின் அதிருப்தியால் மிசோ தேசிய முன்னணி, ஜோராம் மக்கள்  இயக்கத்திடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.