states

img

மீண்டும் வன்முறைச் சூழல்

மணிப்பூரில் வன்முறை காரண மாக கடந்த 4 மாதங்களாக  நிறுத்திவைக்கப்பட்ட இணைய  சேவை தற்போது செயல்படத் தொடங்  கிய நிலையில், திங்களன்று ஆயுதம்  தாங்கிய கும்பல் 2 மாணவர்களை  பிணைக் கைதியாகப் பிடித்து வைத்தி ருப்பது போன்றும், பின்னர் அவர்கள்  கொலை செய்யப்பட்டு பிணமாகக்  கிடக்கும் புகைப் படங்கள் சமூக வலைத்  தளங்களில் வெளியாகியுள்ளது.  போலீசார் விசாரணையில் கடந்த  ஜூலை 6 அன்று காணாமல் போன  பிஜாம் ஹெம்ஜித்(20), ஹிஜாம் லிந்தோ யிங்கம்பி (17) ஆகிய இரு மாணவர்கள்  என அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்த 2 மாணவர்களும் மெய்டெய்  இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்  மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் மீண்  டும் பதற்றம் அதிகரித்துள்ளது. மாண வர்களின் புகைப்படங்கள் வைரலா னதைத் தொடர்ந்து எந்தவித அசம்பா விதமும் நடைபெறாமல் இருக்க பாது காப்புப் பணியாளர்கள் உஷார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளதாக மூத்த அதி காரி ஒருவர் தெரிவித்தார்.