மணிப்பூர் சென்றுவந்த இந்தியா கூட்டணியின் 21 எம்.பி.க்கள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அளித்துள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: இந்த மனுவின் கீழே கையொப்ப மிட்டுள்ள ‘இந்தியா’ கூட்டணியின் தலைவர்களான நாங்கள், ஆழ்ந்த வருத்தம் மற்றும் வேதனையுடன், உங்களின் மேலான தலையீட்டிற்காக இந்த குறிப்பாணையை தயக்கமின்றி சமர்ப்பிக்கிறோம். உங்களின் தலையீட்டின் மூல மாகவே மணிப்பூர் மாநிலம் எதிர் கொள்ளும் அசாதாரண சூழ்நிலையை சரிசெய்ய முடியும். இயல்புநிலையை விரைந்து மீட்டெடுக்க முடியும். கடந்த சில வாரங்களில் மணிப் பூரில் நிலைமை ஒரு முக்கியமான கட்ட த்தை எட்டியுள்ளது. சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இணை யத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய வைரல் வீடியோ நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. அரசு நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் இந்த விவகாரத்தை உடனடியாக கவனிக்கத் தவறிவிட்ட னர். குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ய இரண்டு மாதத்திற்கும் மேலான தாமதம், பிரச்சனையின் தீவிர த்தன்மையை அதிகப்படுத்தி விட்டது. தற்போது ஒரு சம்பவம் மட்டுமே வெ ளியே தெரியவந்துள்ளது. ஆனால், இதுபோல பெண்களுக்கு எதிரான பல கொடுமைகள் நடந்துள்ளன. இந்நிலையில், பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, 21 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ‘இந்தியா’ கூட்டணியின் குழு, 2023 ஜூலை 29-30 தேதிகளில் மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டன.
மணிப்பூர் மக்களுக்கு ஒரு மைப்பாட்டு செய்தியைத் தெரிவிப்பது மற்றும் மணிப்பூர் நிலவரத்தை மதிப் பிடுவது என்ற அடிப்படையில், அனு பவம் மற்றும் உணர்திறன் வாய்ந்த, மக்களவை, மாநிலங்களவை ஆகிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளை யும் சேர்ந்த 21 உறுப்பினர்களைக் கொண்ட குழு மணிப்பூர் சென்றது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மக்கள் எதிர்கொள்ளும் பேரழி வுகள் மற்றும் கஷ்டங்கள் என மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் மோச மான மற்றும் தீவிரமான பிரச்சனை களை நேரில் கண்டது. இதுதொடர் பாக மணிப்பூர் ஆளுநருக்கும் குறிப்பாணை ஒன்றை சமர்ப்பித்தது. மணிப்பூரில் வன்முறையின் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, 200-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலி யாகியுள்ளன. 500 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும், 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தீவைப்பு தொடர்பான சம்பவங்களில் எரிந்து நாசமாகியுள்ளது. 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து, இக்கட்டான சூழ்நிலையில் வாழ்கின்ற னர். இந்நிலையில், மாநிலம் முழுவது முள்ள நிவாரண முகாம்களில், மூன்று வெவ்வேறு இடங்களில் உள்ள நிவா ரண முகாம்களை எம்.பி.க்கள் குழு பார்வையிட்டது. சூரசந்த்பூர், மொய்ராங் மற்றும் இம்பால் உள்ளி ட்ட மோதல்களால் பாதிக்கப்பட்ட பகு திகளில் உள்ள மக்களுடன் உரை யாடி, அவர்களின் கவலைகளைக் கேட்டறிந்தனர். நிலைமைகளை நேரிலும் பார்வையிட்டனர்.
மணிப்பூர் மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மிக மோசமாக உள்ளன. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு. நிவாரண முகாம்களில் உணவு மற்றும் நிவாரணப் பொருட் கள் குறைவாக கிடைப்பதால் சிரமங் களை எதிர்கொள்கின்றனர். நிரந்தர பயம் மற்றும் பாதுகாப்பற்ற நிலை யில் அவர்கள் வாழ்கின்றனர். அவர் களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப் படுவதுடன், அவர்களின் நியாய மான தேவைகளும் பூர்த்தி செய்யப் பட வேண்டும். அவர்களின் வாழ்க்கை யை மீண்டும் கட்டியெழுப்ப மறு வாழ்வுக்கான நடவடிக்கைகள் துவங்கப்பட வேண்டும். மணிப்பூரில் மூன்றுமாத காலமாக இணையதள சேவைகள் தடை செய்யப்பட்டு உள்ளன. இது பல்வேறு சமூகங்களுக்கு இடையே அவ நம்பிக்கை மேலும் அதிகரிப்பதற்கும், தவறான தகவல் பரவுவதற்கும் காரணமாகி விட்டது. சுமார் மூன்று மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வி மற்றும் கற்றலை மோசமாக பாதித்துள்ளது.
இந்த பின்னணியில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி யதிலிருந்தே, ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள், தீவிரமான தேசிய முக்கி யத்துவம் வாய்ந்த, இந்த (மணிப்பூர்) விவகாரத்தில் விரிவான விவா தத்தையும், அதைத் தொடர்ந்து, பிரத மரிடம் இருந்து ஒரு அறிக்கையை யும் கோரி வருகின்றன. தொடர்புடைய விதிகளின் கீழ் நோட்டீஸ்களை தாக்கல் செய்த போதிலும், தொடர்ந்து எங்களின் கோரிக்கைகள் நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் நிரா கரிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷ யத்தில் எந்தவொரு அர்த்தமுள்ள விவாதத்தையும் அனுமதிக்க வில்லை. இதுதொடர்பாக மாநிலங் களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, அவரை தொடர்ந்து பேச விடாமல் மைக் அணைக்கப்படுகிறது. இது நமது நாடாளுமன்ற ஜன நாயகத்தின் மீது புதிதாக விழுந்திருக் கும் கறையாகும். இதுகுறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். எனவே, மணிப்பூரில் நல்லிணக்கத் தையும், அமைதியையும் நிலைநாட்ட உடனடியாக தலையிடுமாறு உங் களை நாங்கள் கேட்டுக்கொள் கிறோம். கடந்த 92 நாட்களின் பேரழி வுக்கான பொறுப்புக்கூறல் தீர்மானிக்கப்பட்டது. மணிப்பூரில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி வழங்குவதில், கடமையை நிறை வேற்றுமாறு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு அழுத்தம் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மணிப்பூர் சூழ்நிலைகள் குறித்து, பிரதமர் மூலம் உடனடியாக நாடாளு மன்றத்திற்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த விஷயத்தில் விரிவான விவாதம் தேவை. மணிப்பூர் மக்களின் துன் பத்தைத் தணிப்பதிலும், மாநிலத்தில் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் பணி களுக்கும் உங்களின் மதிப்புமிக்க ஆதரவும் தலையீடும் முக்கியமானது. இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப் பட்டு உள்ளது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகோய், கே. சுரேஷ், பூலோ தேவி நேதம் (காங்கிரஸ்), கனிமொழி கரு ணாநிதி (திமுக), சுஷ்மிதா தேவ் (திரிணாமுல் காங்கிரஸ்), ராஜீவ் ரஞ்சன் லாலன் சிங், அனில் பிரசாத் ஹெக்டே (ஐக்கிய ஜனதாதளம்), ரவிந்த் சாவந்த் (சிவசேனா), பேராசிரி யர் மனோஜ் குமார் ஆர் ஜா (ராஷ்ட்ரிய ஜனதாதளம்), சுஷில் குப்தா (ஆம் ஆத்மி), ஜெயந்த் சிங் (ராஷ்ட்ரிய லோக்தள்), பி.பி. முகமது பைசல் (தேசியவாத காங்கிரஸ்), ஜாவேத் அய்கான் (சமாஜ்வாதி), பி. சந்தோஷ் குமார் (சிபிஐ), என்.கே. பிரேமச்சந்தி ரன் (ஆர்எஸ்பி), ஏ.ஏ. ரஹீம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), இ.டி. முகமது பஷீர் (ஐ.யு.எம்.எல்), தொல். திருமாவளவன், டி. ரவிகுமார் (விசிக), மஹூவா மாஜி (ஜேஎம்எம்) உள்ளிட்ட 21 எம்.பி.க்கள் கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.