இந்தியா டுடே குழுமத்தால் “ஆஜ் தக் சாஹித்யா ஜக் ரிதி உதயமன் பிரதிபாசம் மன்” என்ற பெயரில் ஆண்டுதோறும் இலக்கிய விருது வழங்கப்பட்டு வரு கிறது.
இந்நிலையில், 2022-ஆம் ஆண் டிற்கான விருதிற்கு “ஈஸ்வர் அவுர் பசார்” என்ற புத்தகத்தை எழுதிய பிரபல பத்திரிகையாளரும், பழங் குடியின செயற்பாட்டாளருமான ஜெசின்டா கெர்கேட்டா தேர்வு செய் யப்பட்டார். இந்த விருதோடு 50,000 ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கப் படும் நிலையில், “சாஹித்யா ஜக் ரிதி” விருதை ஏற்க ஜெசின்டா மறுத்து விட்டார்.
இதுகுறித்து ஜெசின்டா கெர் கேட்டா தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத் தில் கூறுகையில்,”மணிப்பூர் மக்கள் தங்கள் உயிருக்கான மரியாதையை இழந்துகொண்டிருந்தபோது முக்கிய ஊடகங்கள் அனைத்தும் அலட்சியமாக நடந்து கொண்டன. முக்கியமாக மணிப்பூர் பழங்குடியின ரின் உயிருக்கு ஊடகங்கள் எவ்வித மரியாதையும் முக்கியத்துவமும் அளிக்கவில்லை. மணிப்பூர் மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள பழங் குடியின மக்களின் உயிருக்கு மரி யாதை மறுக்கப்படும் போதும், மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் குழந்தைகளும் தொடர் தாக்குத லுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின் றன. இதுவரை எந்த ஊடகமும் பழங் குடி மக்களின் துயரங்களை மரி யாதையான முறையில் வெளிச்சத் திற்குக் கொண்டு வந்ததில்லை என்ற நிலையில், எந்த ஒரு விருதாலும் ஒரு கவிஞனையோ எழுத்தாளனையோ மகிழ்விக்க முடியாது” என பதிவிட் டுள்ளார். ஜெசின்டா கெர்கேட்டா வின் இந்த முடிவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்தியா டுடே ஏற்பு
“சாஹித்யா ஜக்ரிதி” விருது வழங்கும் விழா ஞாயிறன்று தில்லி யில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன் னதாக ஜெசின்டா கெர்கேட்டா “சாஹித்யா ஜக்ரிதி” விருதை ஏற்க மறுத்த முடிவை மதிப்பதாக இந்தியா டுடே நிறுவனத்தின் தலைமை நிர்வா கிகள் கருத்து தெரிவித்துள்ளனர். விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஜெசின்டா கெர்கேட்டாவின் “ஈஸ்வர் அவுர் பசார்” புத்தகம் பழங்குடியின மக்களின் போராட்டங்களையும் இன் னல்களையும் பற்றியது. பழங்குடி யின எழுத்தாளரான ஜெசின்டா கெர்கேட்டாவின் பல படைப்புகள் அயல்நாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.