வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் அரசி யல் ஆதாயத்துக்காக பழங் குடியின மக்களை ஒழிக்கும் நோக்கத் தில் மெய்டெய் மக்களை தூண்டி விட்டு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது பாஜக. உயர்நீதிமன்ற உத்தர வுக்கு பிறகும் பாஜகவின் வகுப்புவாத அரசியலால் அம்மாநிலத்தில் 11 மாதங் களாக வன்முறை நீடித்து வரும் நிலை யில், வன்முறைக்கு இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். உள்நாட்டுப் போர் அளவிற்கு பற்றி எரிந்த சூழலி லும் பிரதமர் மோடி ஒரு முறை கூட மணிப்பூருக்குச் செல்லவில்லை. “இந் தியா” கூட்டணிக் கட்சிகள் மட்டுமே மணிப்பூர் மக்களின் முகாம்களுக்குச் சென்று நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், வரவிருக்கும் மக்க ளவைத் தேர்தலில் மணிப்பூரில் பாஜக போட்டியிடவில்லை என்றும், கூட்ட ணிக் கட்சியான நாகா மக்கள் முன் னணி கழகம் போட்டியிடும் வெளி மணிப்பூர் மக்களவை தொகுதிக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக பொறுப் பாளர் சம்பித் பித்ரா அறிவித்துள்ளார். எனினும் உள் மணிப்பூர் தொகுதி பற்றி பாஜக எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மணிப்பூர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்தால் அம்மாநில மக்கள் கண்டிப்பாக விரட்டியடிப்பார்கள் என்பதை உணர்ந்த பிரதமர் மோடி, பாஜக போட்டியிட்டால் தானே தேர் தல் பிரச்சாரத்திற்கு வரவேண்டும், பாஜக போட்டியிடவில்லை என்றால் வரத் தேவையில்லை என்பதற்காகவே மணிப்பூரில் போட்டியில்லை என பாஜக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாகாலாந்து, மேகாலயாவிலும்
மணிப்பூர் போலவே வடகிழக்கு மாநிலமான மேகாலயா மற்றும் நாகா லாந்திலும் பாஜக போட்டியிடவில்லை என ஒதுங்கியுள்ளது. மேகாலயாவில் உள்ள 2 மக்களவை தொகுதிகளிலும் ஆளும் தேசிய மக்கள் கட்சிக்கும், நாகாலாந்தில் உள்ள ஒரே ஒரு தொகு தியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சிக்கும் பாஜக ஆதரவு அளிப் போம் என பாஜக அறிவித்துள்ளது.