மணிப்பூர் மாநிலத்தில் 2022 ஜூலை முதல் கடந்த ஜூலை மாதம் வரையிலான ஓராண்டில் மட்டும் 1,610 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அசாம் ரைபிள்ஸ் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் இதே போல் 2020 - 2021இல் ரூ.1,200 கோடி மற்றும் 2021 - 2022இல் ரூ.850 கோடி அளவில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பாரபட்சமின்றி தொடரும் என அவர் கூறியுள்ளார்.