மணிப்பூரில் அமைதி திரும்பவும், மணிப்பூர் பாஜக அரசு பதவி விலகக் கோரியும் அசாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரம்மாண்ட பேரணி நடத்தியது. இந்த ஊர்வலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், மத்தியக்குழு உறுப்பினருமான சுப்ரகாஷ் தாலுக்தார், மத்தியக்குழு உறுப்பினர் இஸ்பாகுர் ரஹ்மான், அசாம் மாநிலக்குழு உறுப்பினர் சதன்ஜிப் தாஸ் உள்ளிட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.