மணிப்பூரில் நடந்த கலவரத்தை தொடர்ந்து ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்; 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது; அப்பகுதிகளில் 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக மணிப்பூர் வசித்து வரும் மெய்த்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏடிசிஎஸ்யூஎம் எனும் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பில் சவ்ராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள டோர்பங்க் பகுதியில் ஒற்றுமை ஊர்வலம் நடந்தது. அப்போது திடீரென்று மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.
மேலும் பல மாவட்டங்களில், பழங்குடி சமூகத்தினருக்கும், மெய்த்தி சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறியது. இதனால் அம்மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்; 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது; அப்பகுதிகளில் 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.