states

img

மணிப்பூரில் மீண்டும் வன்முறை - பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

மணிப்பூரில் நேற்று இரவு வெடித்த வன்முறையில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 16 நாட்களுக்கு பிறகு மீண்டும் கங்போக்பி மாவட்டத்தில் நேற்று இரவு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்; 5 பேர் காயமடைந்தனர்.
பாஜக ஆளும் மணிப்பூரில் வன்முறை காரணமாக இதுவரை 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு பொறுப்பேற்று மணிப்பூர் முதல்வர் பீரன் சிங் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, அம்மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.