வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான பாஜக ஆளும் மணிப்பூரில் கடந்த மே மாதத்திலிருந்து குக்கி பழங்குடி யின மக்களுக் கும், மெய்டெய் மக் களுக்கும் இடையே தொடர்ந்து வன் முறையுடன் கூடிய மோதல் அரங் கேறி வருகிறது. இந்த மோதலால் மாநிலம் முழுவ தும் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பல்லாயிரக்கணக் கான மக்கள் சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறினாலும், மாநிலத்தில் அமைதி நிலவுவதாக ஆளும் பாஜக அடிக்கடி செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந் நிலையில், திங்களன்று தெங்னௌபால் மாவட்டத்தில் மியான்மர் ஆதரவு போராளி குழுவிற்கும் மற்றும்தெங்னௌபால் பகு தியில் ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு கிளர்ச்சி குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 13 பேர் கொல் லப்பட்டதாக மணிப்பூர் காவல் அதிகாரி கள் தெரிவித்தனர்.