states

மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி

மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் உள்ள  துப்புல் யார்டு ரயில்வே கட்டுமான தளத்தில் எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 
இதுகுறித்து துணை ஆணையர், "துப்புல் யார்டு ரயில்வே கட்டுமான முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர். 12-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும் அணை உடைந்துள்ளதால் நோனி மாவட்ட தாழ்வான பகுதிகள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார். 
 

;